மூன்றே வாரத்தில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத பானம்..!


உடல் எடை அதிகரித்து விட்டதே என்று கவலைப்பட்டு எந்நேரமும் அதனையே சிந்தித்து உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி என காலத்தை போக்குபவர்கள் பெரும்பாலும் பெண்களே. இருப்பினும், சிறிது காலத்தின் பின்னர் இயலாமை காரணமாக பெரும்பாலான பெண்கள் அவர்களது முயற்சியை கைவிட்டு விடுவார்கள்.

ஆனால் வீட்டில் கிடைக்கும் இயற்கையான பொருட்களை வைத்தே மூன்றே வாரங்களில் ஐந்து பவுண்ஸ் எடையை குறைக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

இதற்கு தேவையானதெல்லாம் தண்ணீரும் இலவங்கப்பட்டையும் தான். தண்ணீரில் இலவங்கப்பட்டையை இட்டு அதனை ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் இந்தத் தண்ணீரை பருகி வந்தால் உடல் எடை சூரியனைக் கண்ட பனியைப் போல் மறையும்.

இந்த கலவையை பருகுவதால் எமது உடலினுள் என்ன மாற்றம் நிகழ்கின்றது?

01. இலவங்கப்பட்டையானது இரத்தத்தில் உள்ள சீனியை உறிஞ்சும் திறனை அதிகரிக்கச் செய்கின்றது. அத்துடன் உடலில் உள்ள கொழுப்பையும் கரைக்கிறது. இதன் மூலம் உடல் எடை படிப்படியாக குறைய ஆரம்பிக்கின்றது.

02. உடலில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். அத்துடன் உடலில் உள்ள நல்ல கொழுப்புகள் சக்தியாக மாற்றப்படும். மேலும் உடலில் உள்ள குளுக்கோஸ் ஒரே மட்டத்தில் பேணப்படும்.

03. குறித்த கலவையானது பசி ஏற்படுவதை தடுக்கிறது. காலையில் உணவு உட்கொள்வதற்கு முன்பாகவும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாகவும் இந்த கலவையை பருக வேண்டும்.

இவ்வாறு 15 நாட்களுக்கு செய்வதன் மூலம் உடல் எடை கணிசமாக குறைவடையும்.

இலவங்கப்பட்டையை உடல் எடையை குறைப்பதற்கும் பயன்படுத்தலாம் என்பதை இப்போது அறிந்து கொண்டீர்களா? – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!