ஹோட்டலில் வாங்கும் சாம்பாரில் உள்ள விபரீதம் – அதிர வைக்கும் ஆய்வுத்தகவல்..!!


தற்போது இன்ஸ்டன்ட் சாம்பார் பொடி மக்கள் மத்தியில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தி வருகிறது.

நாம் உண்ணும் உணவுகளில் சத்தானது சாம்பார். காய்கறியில் தொடங்கி, பருப்பு வகைகள் வரை எல்லாம் சரிவிகித அளவில் இடம்பெற்று இருக்கும்.

ஆனால் இன்று நாம் ஹோட்டலில் வாங்குவது பல இடங்களில் சாம்பாரே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த அளவிற்கு ரெடிமேடாக தயார் செய்யும் வகையில் பொடிகள் விற்பனைக்கு வந்து விட்டன.

இவற்றில் உடனடியாக வெந்து போக சேர்க்கப்படும் கெமிக்களில் தொடங்கி, காரமூட்டும் மிளகாய் வரை அனைத்திலும் விபரீதம் ஒளிந்திருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த குழம்புகளை ஹோட்டலில் பேக் செய்து தரப்படும் பிளாஸ்டிக் கவர்களும் மிகவும் மட்டமான பிளாஸ்டிக்கை சேர்ந்தவை.

சூடாகவோ, மிதமான சூடாகவோ உணவை பிளாஸ்டிக் கவரால் பேக் செய்தால் பிபிஏ என்ற கெமிக்கல் அதிக அளவில் வெளிவந்து உணவுடன் கலந்துவிடும்.

தொடர்ச்சியாக 10, 15 ஆண்டுகள் வரை பிளாஸ்டிக் கவரிலோ, பாத்திரங்களிலோ சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.


அதுபோல பிளாஸ்டிக் பாட்டிலை பல ஆண்டுகள் பயன்படுத்தினாலும் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன.

பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உடலில் சேரும்போது ஹார்மோன்களின் இயக்கத்தில் மாற்றம் உண்டாகும்.

பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் சுரந்து மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புகள் உண்டு.

ஆண்களுக்கு எனில் ப்ராஸ்டேட் புற்றுநோய் வரலாம். ஓவெனில் சூடு செய்யும்போது பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் அதிக அளவில் உணவுவோடு கலக்கிறது.

இதனால் ரத்தப் புற்றுநோய் வர வாய்ப்புகளும் அதிகம்.சூடு செய்யாமல் லன்ச் பாக்ஸ் போல உணவை எடுத்து சென்றாலும், தொடர்ந்து பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறோம் என்பதால் மெல்ல மெல்ல பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உணவுடன் கலக்கும்.

பிளாஸ்டிக் பைகளில் பிஸ்பீனால்-ஏ (Bisphenol-A) என்ற வேதிப்பொருள் கலந்திருக்கும். இது மூளை மற்றும் இனப்பெருக்க மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.பிஸ்பீனால்-A பற்றிய விரிவான ஆராய்ச்சியை கனடா மேற்கொண்டு, பீஸ்பீனால் ஏ-யை பிளாஸ்டிக்கில் சேர்க்கத் தடை விதித்திருக்கிறது.

ஆனால், நம் நாட்டில் சாம்பார் பொடி முதல் பேரீச்சம் பழம் வரை பீஸ்பினால் கலந்த பிளாஸ்டிக் பைகளில் அடைத்துத்தான் விற்கிறார்கள்.

ஜூஸ், பால் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களை அடைத்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு பாலியோலெஃபின்ஸ் (Polyolefins) என்று பெயர்.இதில் பென்சோபீனோன் (Benzophenone) என்கிற ரசாயனம் உள்ளது.

இது பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தைப் பாதித்து, மாதவிடாய்ப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.


கண்ணாடிப் பாத்திரங்கள்தான் உணவைப் பதப்படுத்திவைக்க சிறந்தவையாக கருதப்பட்டு வந்தன.

எனினும் சில நிறுவனங்கள் அதிகளவில் செறிவூட்டப்பட்ட உணவுப்பொருட்களைச் சேமித்து வைக்கும்பொருட்டு கண்ணாடிப் பாத்திரங்களில் காரீயம் (led) கலக்கிறார்கள்.

இந்த காரீயம் உணவுப்பொருளில் கலந்து உடலில் சேரும்போது வாந்தி, கல்லீரல் பிரச்னை, சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே, கண்ணாடியிலும் கவனம் தேவை.எனவே,உணவு பொருட்களை வாழை இலை, வாழை மட்டை, தென்னை மட்டை, பனை மட்டை, பாக்கு மட்டை என இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் பார்சல் செய்வது நல்லது.

அந்தக் காலத்தில் ஹோட்டலில் உணவு வாங்கும் போது சாம்பார், ரசத்துக்கு என டிபன் கேரியர் எடுத்துச்செல்வர்.

அதை இப்போதும் பின்பற்றினால் நல்லது.மொத்ததில்,இயற்கையான உணவுகளை. அதன் தன்மை மாறாமல்… அளவோடு உண்பது தான் ஆரோக்கியம்…

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!