தொப்புளில் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய்யை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?


சில எண்ணை வகைகளை தொப்புளில் விட்டால்.., உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

அது பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க…

தேங்காய் எண்ணை:
தேங்காய் எண்ணையை தொப்புளில்விட்டால், இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும். வறண்ட சருமம் சரியாகும். உடலில் இருக்கும் வறட்சி நீங்கும். சருமம் அழகாக இருக்கும்

ஆலிவ் எண்ணை :
ஆலிவ் எண்ணெய்யை தொப்புளில் விட்டு சிறிது நேரம் மெதுவாக மென்மையாக சுற்றி மசாஜ் செய்தால், இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகள் சீராக இயங்கும். உடலில் உள்ள சோர்வு நீங்கும்.

உங்களின் சருமம் பொலிவாக மாறும். குழந்தைக்கு திட்டமிடுபவர்கள், இதை செய்தால் பலன் கிடைக்கும்.

சுத்தமான நெய் அல்லது வெண்ணெய் :
பசும்பாலால் தயாரித்த சுத்தமான நெய் அல்லது வெண்ணெய்யை தொப்புளில் விட்டு, மசாஜ் செய்து வந்தால்,சருமம் மென்மையாக மாறும். இதனால்., பார்வைத்திறனும் மேம்படும். சருமம் பளபளப்பாக காட்சியளிக்கும்.வெடித்த உதடு அழகாக மாறும்.

வேப்பெண்ணை :
இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரம் வேம்பு. வேப்பெண்ணையை தொப்புள் பகுதியில் சிறிதளவு விட்டால், முகத்தில் உள்ள சிறு சிறு வெள்ளை திட்டுக்கள் மறையும்.
தூங்கும் முன்னர் வேப்பெண்ணெய்யை 2-3 துளிகள் தொப்புளில் விட்டால், முகத்தில் வரும் பருக்கள் சில நாட்களிலேயே மறைந்துவிடும். சரும எரிச்சலுக்கு வேப்பெண்ணை நல்ல தீர்வு.

கடுகு எண்ணை:
தூங்குவதற்கு முன்பு கடுகு எண்ணையை 3-4 துளிகள் அளவுக்கு தொப்புளில்விட்டால், வறண்ட மற்றும் பிளவுபட்ட உதடு சரியாகும். தொடர்ந்து இப்படிச் செய்தால், உதடு இளச்சிவப்பாகக் காணப்படும். ஆரோக்கியமாகவும் இருக்கும். வறண்ட மற்றும் சிவப்பான கண்கள்கூடச் சரியாகும். உதட்டில் தோல் உரியும் பிரச்சனையும் நிற்கும்.-Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!