வயிற்றுப் புண் உள்ளவர்கள் இப்படி அறிகுறி இருந்தால் ஜாக்கிரதையா இருக்கனும்..!


வயிற்றுப் புண் என்பது கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இன்றைய கால கட்டத்தில் ஆண், பெண் என இரு பாலாருக்கும் இந்த வயிற்றுப் புண் ஏற்படுகின்றது. மாறியுள்ள இந்த உலகில் வேலையின் நிமித்தம் உணவில் அக்கறை கொள்ளாது கையில் கிடைக்கும் ஏதோ ஒன்றை உட்கொள்வதோடு சரியான நேரத்திற்கு உட்கொள்ளமையே இந்த வயிற்றுப்புண் ஏற்படக்காரணமாக உள்ளது.
அதுசரி, இந்த வயிற்றுப்புண் எமது உடலில் உள்ளதா இல்லையா என்பதை எவ்வாறு கண்டறிவது?

பொதுவாக வயிறு எரிவது போன்ற கடுமையான வலி, நெஞ்சுப் பகுதி எரிவு, சில வேளைகளில் வாந்தியுடன் குருதி வெளியேறுதல், கறுப்பு நிற மலம் வெளியேறல், உணவு உண்டபின் நோவு குறைவடைதல், குமட்டல், உடல் நிறை குறைவடைதல் மற்றும் மனநிலை மாற்றம் என்பன இந்த வயிற்றுப் புண் உள்ளமைக்கான முக்கிய அறிகுறிகளாகும்.

எவ்வாறு வயிற்றுப் புண் ஏற்படுகின்றது?

நாம் உட்கொள்ளும் உணவு சமிபாடு அடைவதற்கு இரைப்பையில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கப்படுகிறது. இந்த நேரங்களில் உணவு உள்ளெடுக்காவிடின் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.

மேலும் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் போதும், மூளையின் தூண்டுதலால் சில நொதியங்கள் சுரக்கப்படும். இதனூடேயும் இந்த நிலை ஏற்படலாம். இரைப்பைச் சுவரில் உறுத்தலை ஏற்படுத்தக் கூடிய எஸ் பிரின் , வலி நிவாரணிகள் மற்றும் விட்டமின் சி போன்றவையும் சில பக்டீரியா தொற்றுக் காரணிகளும் வயிற்றுப் புண் ஏற்படக் காரணங்களாக அமைந்து விடுகின்றன.


இவை ஏனைய சில நோய்களைப் போல பரம்பரை நோய் அல்ல. வாழ்க்கை நடை முறைகள், பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது
.
மது அருந்துதல், புகைப்பிடித்தல், வாயுக்களால் நிரப்பப்பட்ட குளிர்பானங்கள், எண்ணெய் கலந்த உணவு வகைகளின் பாவனை போன்ற வற்றாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.
நாம் என்ன செய்ய வேண்டும்?

மேற் குறிப்பிட்ட அறிகுறிகள் இருப்பின்மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மருத்துவ பரிசோதனை மூலம் சரியான முறையில் மருந்துகளை உள்ளெடுப்பதன் மூலம் வயிற்றுப் புண்ணைக்குண மாக்கலாம்.


குறிப்பு
நீண்ட நாட்களுக்கு வயிற்றுப் புண் காணப்படின் தொடர்ந்து ஏற்படுத்தப்படும் உறுத்தலால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும். சில பக்டீரியாக்களின் தொற்றால் ஏற்படும் வயிற்றுப் புண் நிலைக்குட்ரிப்பிள் தெரபிசிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது. பெரிய பாதிப்பு ஏற்படின் அறுவைச் சிகிச்சைக் குரிய பரிந்துரை வழங்கப்படும். நீண்ட நாள் வயிற்றுப் புண் தொடரின் இரைப்பை அல்லது குடலில் துவாரம் ஏற்பட்டு உடல் ஆரோக்கியத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.

வீட்டில் செய்ய வேண்டியவை

01. நாளாந்த வாழ்வில் அதிககாரமான உணவு வகைகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.

02. நேர காலம் தவறாமல் உணவு உட்கொள்ள வேண்டும்

03. இரவு உணவினை அவசியம் உட்கொள்ள வேண்டும்.

04. நித்திரைக்குச் செல்ல முன்னர் நீராகாரம் உட்கொள்ள வேண்டும்.


05. அதிகாலையில் வெறும் வயிற்றுடன் வேலை செய்யாமல் அதிகளவு தண்ணிரை உட்கொள்ள வேண்டும்.

06. கொழுப்புக் கலந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

07. வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்ளும் போது மருத்துவ ஆலோசனைப்படி இரைப்பை உறுத்துதலிருந்து பாதுகாக்கும் மருந்துகளையும் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

08. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துலை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

09. உணவு உட் கொண்டவுடன் நித்திரைக்குச் செல்லக்கூடாது.

10. உணவை வேகமாக உட்கொள்ளாமல் ஆறுதலாக போதியளவு நேரம் எடுத்து உட் கொள்ள வேண்டும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!