உங்க கிட்டவே நிற்க முடியலையா..? தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாப்பிடுங்க..!


வாய் துர்நாற்றம் என்பது ரொம்பவே சங்கடமான விஷயம் தான். அடுத்தவர்களிடம் பேசுவதற்கே கூட சற்று தயக்கமாகத்தான் இருக்கும். அப்போ எப்படித்தான் இந்த சங்கடத்தை சரி செய்றது?

வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். புற்று நோயிலிருந்து கூட நம்மை காப்பாற்றிக் கொள்ளலம். நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது.

தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாலட்டாகவோ அல்லது அப்படியே சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும்

வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது. உடலில் தங்கும் தீய நச்சுக்களை எல்லாம் இழுத்து சிறுநீரகத்திற்கு அனுப்புகிறது. இதனால் உங்கள் சருமம் மெருகேறும்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்

அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. எனவே கலோரி அதிகரிக்காமல், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


வாய் துர் நாற்றத்தை போககும்.

உங்களுக்கு வாய் துர் நாற்ற பிரச்சனை இருக்கிறதா? அப்படியென்றால் தினமும்வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள்.

இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும். ஈறுகளைப் பலப்படுத்தும். அதோடு வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துகிறது.

வாய் துர்நாற்றத்தைப் போக்க, எப்போதும் ஒரு சிறு துண்டு வெள்ளரிக்காயை வாயில் வைத்துக் கொள்ளுங்கள்.

30 நொடிகள் வரை வைக்கவும். அதில் உள்ள சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்புத் திறன் வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர்நாற்றத்தை போக்கும்.

உடல் எடையைக் குறைக்கும்.

தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதை பார்ப்பீர்கள். கொழுப்பு செல்களை கரைக்கும். அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும்.

மேலும் உடல் எடையை அதிகரிக்கவும் செய்யாது. வயிற்றிலுள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!