சித்தரத்தை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா?

சித்திரத்தையை எடுத்து கொள்வதால் என்னென்ன பிரச்சினைகளை சரி செய்யும் என்று பார்க்கலாம்.

ஆயுர்வேதத்தில் வைத்தியர்கள் சித்திரத்தை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பயன்படுத்துவார்கள். நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் இது திறன் மிக்கது. சாதாரண காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகளுக்கு சிறிதளவு சித்திரத்தை மற்றும் சிறிதளவு கற்கண்டு ஆகியவற்றை தூளாக்கி ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்பு யாவும் விலகிவிடும்.

ஆஸ்துமாவை குணப்படுத்த:

சிலருக்கு இரைப்பு, இருமல், ஆஸ்துமா பாதிப்பு காரணமாக மூச்சை அடைக்கும் .அவர்கள் சித்தரத்தை, அதிமதுரம். தாளிசப்பத்திரி, திப்பிலி, மிளகு ஆகிய மூலிகைகளை வறுத்து அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் தேனில் குழைத்து சாப்பிட்டு வர பாதிப்புகள் விரைவில் குணமாகும்.

எலும்புகள் பலம் பெற:

நன்கு உலர்ந்த சித்தரத்தை, அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கி தேனில் குழைத்து இரு வேளை ஒரு மண்டலம் என்ற கால அளவில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெகுநாட்களாக எலும்பு வலி போன்ற பாதிப்பு குறையும். எலும்பின் ஆற்றல் மேம்படும்.

இருமலை நீக்க:

சித்தரத்தை துண்டுகளாக வெட்டி 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க வைத்து, மூன்றில் ஒரு பங்காக சுண்டி வந்த பிறகு அந்த நீரை எடுத்து வைத்துக்கொண்டு தினமும் இரண்டு வேளை சில நாட்கள் தொடர்ந்து பகிர்ந்து வந்தால் வறட்டு இருமலை தடுக்கலாம்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!