எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என தெரியுமா..?

எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இறைச்சி:

கோழி இறைச்சியில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதால் செரிமானம் ஆக நேரம் எடுக்கும. எனவே இந்த கோழி கறியை சமைத்து அதை மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் அதை எடுத்து சூடுபடுத்தி சாப்பிடும் போது அதிலுள்ள புரதச்சத்து மேலும் அதிகரிக்கிறது. இதனால் புட் பாய்சன் ஆக மாற வாய்ப்பு உள்ளது.

உருளைக்கிழங்கு:

மேலும் உருளைக்கிழங்கையும் சமைக்கும் போதே சாப்பிட்டுவிட வேண்டும். ஆனால் நம்மில் பலர் அதன் சுவை காரணமாக பிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது எடுத்து சூடுபடுத்தி சாப்பிடுகிறோம். இவ்வாறு சாப்பிடுவதால் உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அப்படியே தங்கிவிடுகிறது.

கீரை:

கீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளது. எனவே கீரையை சமைத்து சாப்பிட்டு மீதமுள்ளதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும்போது நைட்ரேட் ஆனது நைட்ரேஸாக மாறி புற்று நோயை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

முட்டை:

புரோட்டீன் நிறைந்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தும் போது அது விஷமாக மாற கூட வாய்ப்புள்ளது. இதனால் செரிமான கோளாறு மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.

காளான்:

காளான் வாங்கினால் உடனுக்குடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. இதில் புரோட்டின் இருப்பதால் சூடுபடுத்தி சாப்பிடும் போது அதுவும் விஷமாக மாறும். இதுவும் செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!