இளம் வயதிலேயே வழுக்கையா? இந்த ஜூஸ் குடிச்சா தலையில வழுக்கையே விழாதாமே…!


புடலங்காயை இளசாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு அல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும்.

மேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும்.

விதைகள் வயிற்றுக்குத் துன்பம் தருவதாக இருக்கும். முற்றிய புடலங்காயோ அதன் விதைகளோ வயிற்றுப் போக்கை உண்டாக்கிவிடும்.

100 கிராம் புடலங்காயில் 94 சதவிகிதம் உணவாகும் பகுதி ஆகும். 92.9 கிராம் நீர்ச்சத்து உடையது. புரதம் 0.5 கிராமும், கொழுப்புச்சத்து 0.3 கிராமும், போலேட் 15 மைக்ரோ கிராமும் , வைட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன.

புடலங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கான மிகச்சிறந்த மருந்தாக அமையும். வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றவும் மாரடைப்பைத் தடுக்கவும் புடலங்காய் உதவுகிறது. கருத்தடைக்கு உதவுவது, பால்வினை நோய்களையும் தடுக்கும் சக்தி புடலங்காய்க்கு உள்ளது.

புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ், கிளைகோஸைட்ஸ், டேனின்ஸ் ப்ளேவனாய்ட்ஸ், பெனால்ஸ் மற்றும் ஸ்டிரால்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன.


விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கிவிட்டு கறியாக சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல் மறைந்து போகும்.

புடலங்காய் இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.

அதுபோல் இதயம் பலவீனமானவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக்கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிடுவதால் இதயத்துடிப்பு சமநிலை பெருவதோடு இதயமும் பலம்பெறும்.

இதய நோயாளிகள் 48 நாட்கள் தொடர்ந்து புடலங்காய் ஜூஸ் குடித்து வந்தால் உடல் நலம் பெறமுடியும். புடலங்காயின் இலைச்சாறு 5 முதல் 10 மி.லி அளவுக்கு பருகினால் வாந்தி பேதியையும் உண்டாக்கும்.

இளம் வழுக்கை என்கிற பாதிப்புக்கு ஆளான ஆண், பெண் இருபாலாருக்கும் புடலங்காய் இலைச் சாறு மிகச் சிறந்த பலனைத் தருவதாக இருக்கும்.

புடலஞ்செடியின் இளம் இலைகளைச் சேகரித்து சுத்தம் செய்து, அரைத்துப் பிழிந்த சாற்றில் அன்றாடம் காலையில் 30 மி.லி வரை குடித்து வருவதால் இளம் வழுக்கைத் தலையிலும் புழுவெட்டால் ஏற்பட்ட திட்டுத் திட்டான வழுக்கையும் சரியாகி, நாளடைவில் தலைமுடி வேகமாக வளர ஆரம்பிக்கும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!