குண்டானவர்கள் இந்த எண்ணையை எப்பவுமே தொடவே கூடாதாம்..! எச்சரிக்கை பதிவு..!


இன்று விலை குறைவாக உள்ளது என பாமாயிலை தான் மக்கள் அதிகம் உபயோகிக்கின்றனர். இப்பாமாயில் நமது உடலுக்கு எந்த மாதிரியான நன்மை, தீமைகளை ஏற்படுத்துகின்றன என்று தெரியுமா?!

பாமாயிலில் அதிக அளவில் கொழுப்பு உள்ளது என்பதால் இதய நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக இதை தொடவே கூடாது.

அதே போல் உடல் பருமனாக இருப்பவர்கள் பாமாயில் சாப்பிட்டால் உடல் எடை இன்னும் கூடும். அதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நிச்சயம் பாமாயிலை சாப்பிடாதீர்கள்.


வளர்சிதை நோயை ஏற்படுத்துவதில் பாமாயிலிலுள்ள கொழுப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வளர்சிதை நோய் உள்ளவர்கள் பாமாயிலை சாப்பிடக்கூடாது.

பாமாயிலை உணவில் அதிக அளவில் சேர்த்து சாப்பிடும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

பாமாயிலும் கொழுப்பு சத்து மிக்க எண்ணெய் என்பதால் அதிக கொழுப்பு சத்து உள்ளவர்கள் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பாமாயிலின் நன்மைகள் என்று பார்த்தோமானால் இது புற்று நோய் செல்களை அழிக்கும் சக்தி கொண்டவை.


மேலும் பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் என்பது பார்வை திறனை அதிகரிக்க செய்யும்.

அது போலவே இந்த பீட்டா கரோட்டின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாமாயிலில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளதால், இது இளமை தோற்றத்தை தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதே போன்று உடலுக்கு தேவையான விட்டமின் ஏ பாமாயிலில் உள்ளது. விட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்கள் பாமாயிலை தாராளமாக உபயோகிக்கலாம்.-
Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!