மருத்துவ குணம் கொண்ட 40 வகை கீரைகளும் அதன் அசர வைக்கும் முக்கிய பயன்களும்..!

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.குப்பைகீரைபசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.


புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.


தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம்தரும்.மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.


சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.தவசிக்கீரை- இருமலை போக்கும்.
சாணக்கீரை- காயம் ஆற்றும்.வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.


கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளைமூலம்விலக்கும்.காரகொட்டிக்கீரைமூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!