பாலோடு இதையும் சேர்த்து காய்ச்சிக் குடிங்க… இவ்வளவு பிரச்னைகளும் தீர்ந்திடும்…!


பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிலும் உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக, நாம் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றைச் சாப்பிடுவதில் குறைந்த அளவுகூட உலர் திராட்சையை சாப்பிடுவதில்லை.

ஆனால் உலர்திராட்சையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. தினமும் 4 உலர் திராட்சையாவது அப்படியே அல்லது பாலில் காய்ச்சியோ குடிப்பதைக் கட்டாயமாக செய்து பாருங்கள். உங்கள் உடல்நிலையில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள்.


உலர் திராட்சையில் (dry Raisins) உள்ள கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரண்டு வேளை, உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.


ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலின்றி இருந்தாலே ஆயுள் நீடிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.

குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

பெருஞ்சீரகத்தோடு உலர் திராட்சை சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!