எந்த இடத்தில் எப்படி மசாஜ் செய்வதால் என்ன நோய்கள் குணமாகும் தெரியுமா..?


கைகளின் பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இருக்கும் இடத்தில் கை வைத்து அழுத்தி மசாஜ் செய்தால் முதுகு வலி, பல் வலி, கழுத்து தசை வலி போன்றவைகள் குணமாகும்.

கண்களின் புருவத்துக்கு கீழே உள்ள பகுதிகளின் இரு முனையிலும் 1 நிமிடத்துக்கு மசாஜ் செய்தால் ஜலதோஷம் சரியாவதுடன் கண்களின் காட்சி கூர்மையும் பிரகாசமாகும்.

கண்களின் இரண்டு புருவத்துக்கு நடுவில் இருக்கும் நெற்றி பொட்டில் கை வைத்து மசாஜ் செய்தால் தலைவலி குறையும். அதனுடன் கண்ணில் ஏற்படும் சோர்வும் சரியாகும்.
மூக்கின் கீழே இரு பக்கங்களிலும், சரியாக பள்ளம் விழும் இடத்தில் அழுத்தினால் தலைவலி, பல்வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் தீரும்.

பின்பகுதி கழுத்தின் கீழே முதுகு ஆரம்பமாகும் இடத்தில் கை வைத்து மசாஜ் செய்தால் கண் வலி, கடுமையான தலைவலி மற்றும் காது வலி குணமாகும்.

Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!