இந்த அறிகுறிகளை கண்டுக்காம விட்டால் ..எப்ப வேணா உங்களை தாக்கலாம் இதய நோய்…!!


இதய நோய்கள் மிகவும் ஆபத்தானவை. அதற்கான அறிகுறிகளை நாம் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அது பின்னர் ஆபத்தில் முடிந்துவிடும். நன்கு உடல் நலம் கொண்டவர்களும் கவனிக்க வேண்டிய இதய நோய்கள் குறித்த முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.


1 – தற்போதைய வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள் நமது வாழ்நாளின் பிற்பகுதியில் இதய நோய்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. இதயத் தமனிகளில் அதிகப்படியான சேர்க்கை காரணமாக, இளம் வயது, நடுத்தர வயது கொண்டோருக்கும் இதய பாதிப்புகள் ஏற்படும். அதிக ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படாது. அது பின்னர் இதய அடைப்பு, சிறுநீரக பிரச்னைகளுக்கு வழிவகுத்து விடும். ஒழுங்கற்ற இதயத்துடிப்பும் ஆரோக்கியமான உடலமைப்பிற்கு ஏற்றதல்ல.


2 – இதய அடைப்பு ஏற்படுவதாக உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அழைத்து விட வேண்டும். பொறுமையாக காத்திருந்தால் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இதயத்தில் வலி ஏற்படுவது இதய அடைப்பிற்கான ஒரு முக்கிய அறிகுறியாகும். மூச்சு வாங்குவதில் பிரச்னை, வியர்த்தல், ஒற்றை தலைவலி, மேல்புற உடலின் பல்வேறு இடங்களில் வலி ஏற்படுவது இதய பிரச்னையின் அறிகுறிகளாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!


3 – இதயத்தில் ஏற்படும் வலி அதன் எப்பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். வயிற்றின் மேற்புறம், கழுத்து, கை, தோள்பட்டை, தாடை வரை கூட வலி சென்று விடும். ஆண்களும், பெண்களும் இதய அடைப்பை வித்தியாசமாக உணருவர். ஆண்களுக்கு இதயத்தில் வலி ஏற்படுவது போன்றும், பெண்களுக்கு இதயத்தில் எரிச்சல் ஏற்படுவது போன்றும் உணருவர். குடிப்பழக்கம் அறவே நிறுத்தப்பட வேண்டும்.


4 – இதய அடைப்பில் இருந்து மீண்டும் வருவோர், மருத்துவரின் ஆலோசனைகளை நிச்சயமாக பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதய நோயின் பாதிப்பை குறைத்துக் கொள்ளலாம். இதய அடைப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று புகைப்பழக்கம். குடும்ப வரலாறு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் எடை கூடுதல், முறையற்ற பழக்க வழக்கங்கள்.

Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!