ஒரே நாளில் உடலில் உள்ள கழிவுகளை கால் வழியே வெளியேற்றுவது எப்படி..?


உடம்பில் உள்ள கழிவுகள் மற்றும் கேடுவிளைவிக்கக் கூடிய பொருட்களை கால் வழியே வெளியேற்றுவது எப்படி என்பது உங்களுக்குத் தெரியுமா?

01. கடைகளில் விற்கப்படும் பூட்டிடொக்ஸ்பாட் இனை வாங்கி இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர் அதனை கால்களின் அடிப்பகுதியில் ஒட்டிக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் அதனை அகற்ற வேண்டும். அதன் போது குறித்த ஸ்டிக்கர் கறுப்பு நிறமாக காணப்படின் உங்கள் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற ஆரம்பித்து விட்டது எனப் பொருள்.

02. அரைக் கோப்பை எப்சம் உப்பு, அரைக் கோப்பை பென்டொனைட், எசன்ஷல் எண்ணெய் சில துளிகள் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சுடுநீரில் எப்சம் உப்பு மற்றும் எசன்ஷல் எண்ணெய் ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் பென்டொனைட் கிளேயை தண்ணீருடன் கலக்க வேண்டும். இதன் போது இரும்பு எதனையும் உபயோகிக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் கிளே கலந்த தண்ணீரை குளியல் தொட்டியில் கலக்க வேண்டும். 20 நிமிடத்திற்கு பிறகு இந்த தண்ணீரில் குளித்தால் முழு உடம்பிலும் உள்ள கழிவுகள் நீங்கும். இதனால் உடம்பில் மக்னீசியம் அதிகரிக்கும்.


03. 2 கோப்பை பேக்கிங் சோடா, ஒரு கோப்பை எப்சம் உப்பு, ஒரு கோப்பை கடலுப்பு, சிறிது ஆப்பிள் சைடர் வினிகர் ஆகியவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். முதலில் சுடுநீருடன் பேக்கிங் சோடாவை கலந்து பின்னர் அதனை குளியல் தொட்டியில் இடவும்.

அடுத்ததாக ஆப்பிள் வைடர் வினிகரையும் சேர்க்க வேண்டும். பின்னர் குறித்த தொட்டியில் எசன்ஷல் எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவற்றை கலந்து 30 நிமிடங்களுக்கு அந்த தொட்டியில் குளியலை மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் குளியலை மேற்கொண்டவுடன் எமது உடம்பு சேர்வடைந்தது போல் காணப்படும். இருப்பினும் இது குறித்து அச்சம் அடையத் தேவையில்லை. சோர்வு ஏற்படுமாயின் உடம்பில் உள்ள கழிவுகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டு விட்டன எனப் பொருள்படும்.

மேற்குறித்த முறைகளை அதிக பணச் செலவின்றி வீட்டிலேயே மேற்கொள்ள முடியும். இதன் மூலம் உடம்பில் உள்ள கழிவுகள் துல்லியமாக வெளியேறும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!