அடிக்கடி குளிப்பதால் இவ்வளவு ஆபத்தா..?


அடிக்கடி குளிப்பதால் உடல்நலத்திற்கு பாதிப்புஏற்படுவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தினமும் குளிப்பதால், உடல்ஆரோக்கியத்துடன், நோய்வராமல்,இருப்போம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், லண்டனில்நடத்தப்பட்ட ஆய்வில் அடிக்கடி குளிப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக தகவல்வெளியாகியுள்ளது.

சில நாட்கள் குளிக்காமல் இருப்பதால் உடலிலிருந்து துர்நாற்றம் வீசும் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், அடிக்கடி குளிப்பதால், செரிமான பிரச்சனை, நோய்எதிர்ப்புசக்தி குறைவு மற்றும் இதயக்கோளாறுகள் ஏற்படுகின்றன.


உத்தா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜெனிடிக்சயின்ஸ் சென்டர் நடத்திய ஆய்வில், அதிக அளவிற்கு, உடலை சுத்தம் செய்வதால்,உடலை பாதுக்காக்க கூடிய, பாக்டீரியா, வைரஸ் ஆகியவை உடலிலிருந்து நீக்கப்படுகின்றன.

அவை உடல்ஆரோக்கியத்தை பாதுகாக்க தேவையானவை. அந்தவகை,பாக்டீரியா மற்றும் வைரஸ், அடிக்கடி குளிப்பதால் வெளியேறுகின்றன. அதனால் அடிக்கடி குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் குளிக்கும் போது, அடிக்கடி ஷாம்பூஉபயோகிப்பதாலும் உடல் உபாதைகள் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!