குதிரை சவாரி செய்த 6 வயது சிறுமிக்கு நிகழ்ந்த துயரம்…!


மும்பையில் குதிரை சவாரி செய்யும் போது தவறி விழுந்து 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள ராஜீவ் காந்தி சிறுவர்கள் பூங்காவில் 6 வயது சிறுமி நேற்று குதிரை சவாரி செய்தார். அப்போது அவர் தவறி விழுந்துள்ளார்.


கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவளை சோதித்து பார்த்த மருத்துவர்கள் சிறுமி மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


சிறுமியின் சாவுக்கு குதிரை உரிமையாளர் காரணம் எனக்கூறி அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குதிரை சவாரி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் அப்பகுதியில் சில ஆண்டுகளாக சட்ட விரோதமாக சவாரி நடைபெற்று வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குதிரை சவாரி செய்யும் போது தவறி விழுந்து 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!