நெஞ்செரிவை உடனடியாக குணப்படுத்தும் அற்புதமான பொருள்..!


எம்மில் பலர் இப்போது நெஞ்செரிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைப் போக்க, நாம் உட்கொள்ளும் இனிப்பு வகைகளை குறைத்தல் மற்றும் செலரி தாவரத்தை உட்கொள்வது சிறந்தது. அதே போல் புரோபயோட்டிக் உட்கொள்வதன் மூலமும் இதிலிருந்து விடுபட முடியும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

புரோபயோட்டிக் என்பது ஒரு பக்டீரியா வகை ஆகும். ஆனால் இந்த பக்டீரியாவினால் பாதிப்பு எதுவுமில்லை. இது உடலில் உள்ள கெட்ட பக்டீரியாக்கள் பெருகுதல் மற்றும் உருவாகுதலை தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்டது.

இந்த புரோபயோட்டினை உட்கொள்வதனால் நெஞ்செரிவு நிற்பது மட்டுமல்லாது பின்வரும் நன்மைகளும் ஏற்படுகின்றன.

01. உணவு நல்ல முறையில் சமிபாடடையும்
02. குடல் எரிவை தணிக்கும்
03. குடல் தொற்றை இல்லாதொழிக்கும்
04. வயிற்றில் அல்சர் உருவாவதை தடுக்கும்
05. பெண்பிறப்புறுப்பில் தொற்று ஏற்படுவதை தடுக்கும்
06. சிறுநீர் தொற்றிலிருந்து பாதுகாக்கும்
07. தடுமல் மற்றும் காய்ச்சல் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கும்

இந்த புரோபயோட்டிக்ஸ் நாம் உண்ணும் யோகட்டில் உள்ளதென்பதை நினைவில் இருத்திக் கொள்ளவும்.

எனினும், மருந்து கடைகளில் புரோபயோட்டிக் உள்ள மருந்தை உட்கொள்வதென்பது வைத்தியர் ஆலோசனையுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவை தவிர உடல் எடையைக் குறைத்தல், துரித உணவுப் பொருட்களை தவிர்த்தல், புகைபிடித்தலை நிறுத்துதல், உறங்குவதற்கு குறைந்தது இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னதாக இரவு உணவை உட்கொள்ளுதல் மற்றும் உறங்கப் போகும் முன் தளர்வான ஆடைகளை அணிதல் போன்றவற்றின் மூலமும் நெஞ்செரிவிலிருந்து விடுபடலாம்.- – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!