ஏதாவது ஒரு உணவை உட்கொண்டதன் பின்னர் நெஞ்சுப் பகுதியில் எரிவு ஏற்படுதலே இந்த நெஞ்செரிவு ஆகும். இவ்வாறு ஏற்பட நாம் உட்கொண்ட உணவே காரணம். அந்த உணவுகளே ஊக்கியாக செயற்படுகின்றன எனப் பொருள்படும். எனினும், குறிப்பிட்ட உணவு வகைகளை உட்கொண்டதன் பின்னர் ஏற்படும் இந்த நெஞ்செரிவானது ஆளுக்குஆள் வேறுபடும்.
இருப்பினும், பின்வரும் உணவுகள் உட்கொள்வதை குறைத்தல் அல்லது தவிர்த்தல் நெஞ்செரிவிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
01. சொக்லட்
02. பெப்பர்மின்ட்
03. சிட்ரஸ் அடங்கியுள்ள பழங்கள்
04. கெப்பின் அடங்கியுள்ள கோப்பி மற்றும் தேநீர்
இந்த நெஞ்செரிவு தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது எ உடல் எடை அதிகரிப்பதும் நெஞ்செரிவை அதிகரிக்கின்றது எனக் கண்டறியப்பட்டது.
பொதுவாக நாம் உட்கொள்ளும் இனிப்பு வகைகளை குறைத்துக் கொள்வதன் மூலம் எமது எடை அதிகரிப்பதை குறைத்துக் கொள்ளலாம். ஆகவே நாம் உணவுக் கட்டுப்பாட்டை பேணுவது மிகமிக அவசியமாகின்றது.- © Tamilvoice.com | All Rights Reserved
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!