100 ஆண்டுகள் உயிர் வாழ ஆசையா? சித்தர்கள் சொன்ன பரம ரகசியத்தை செய்தாலே போதும்….!!


யாருக்குத் தான் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காது?

எவ்வளவு காலம் வாழ்வீர்கள் என்று கேட்டால்..? அது விதி என்று நாம் எளிதாக சொல்லிவிடுவோம்.

ஆனால் நம்முடைய சித்தர்கள் கூறிய வழிமுறைகளின்படி., முறையாக வாழ்க்கையை நடத்துபவர்கள் நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வார்களாம்.

அதே போன்று, அறிவியல் ரீதியாகவும் நீண்ட ஆயுளுடன் வாழ சில வாழ்வியல் முறைகளை இதில் பார்க்கலாம்.

என்னென்னவெல்லாம் செய்தால் நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முடியும்..?


. அதிகாலையில் எழுபவன்.
. இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்.
. முளை கட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்.
. மண்பானைச் சமையலை உண்பவன்.
. உணவை நன்கு மென்று உண்பவன்.
. உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்.
. வெள்ளை சர்க்கரையை உணவுப் பண்டமாக ஏற்றுக் கொள்ளாதவன்.
. கோலா, பெப்சி போன்ற செயற்கை பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்.

. மலச்சிக்கல் இல்லாதவன்.
. கவலைப்படாத மனிதன்.
. நாவடக்கம் உடையவன்.
. படுத்தவுடன் தூங்குகிறவன்.
. எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்.
. தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்.
. கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்.
. கற்பு நெறி தவறாது வாழ்பவன்.

. ஈகை எனும் கொடுத்து உதவும் உன்னத மனப்பான்மையை வளர்ப்பவன்.
. வளையாத முதுகுத் தண்டுடன் எப்போதும் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்.
. இடது பக்கமாகப் படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்.
. தூங்கி எழுந்ததும் காலை 2 டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்.
. உணவு உண்ண வேண்டிய முறையும் அளவும் அறிந்து உண்பவன்.
. வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்
. 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவர்.


மேற்கண்ட முறைகளை கடைபிடிக்கும் நபர்கள் இந்த உலகில் நூறு ஆண்டுகள் நோயின்றி வாழ முடியும்.

இப்போது சொல்லுங்கள் நீங்கள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்வீர்கள்..?
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!