இறைச்சி உண்பதில் கொள்ளைப்பிரியம் கொண்டவரா நீங்கள்? இத முதல்ல படிங்க…!


உலகமயப்படுத்தலின் விளைவாக பழக்கவழக்கங்கள் மாறிப்போயுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் எம்மவர்களிடையே மாறிப்போன பழக்கவழக்கம் எது எனக் கேட்டால் உணவுப் பழக்கவழக்கத்திற்கு முதலிடம் கொடுக்கலாம்.

ஆம், இப்போதெல்லாம் சத்தான வீட்டுணவுகளை உண்பதை தவிர்த்து கடைகளில் விற்கப்படும் உணவுகளையே அனைவரும் விரும்புகின்றனர். குறிப்பாக இறைச்சி வகைகள் கலந்த உணவுகளையே அனைவரும் விரும்பி உண்கின்றனர்.

வீட்டுணவைச் சாப்பிடும் போது கூட இறைச்சி இல்லாமல் அன்றைய உணவு இருக்காது என்று தான் கூற வேண்டும். ஆம், அந்த அளவுக்கு சைவ உணவை உண்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று தான் குறிப்பிட வேண்டும்.

இறைச்சி வகைகளை அதிகளவில் உண்பதால் சிலருக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நாம் உண்ணும் இறைச்சி வகைகள் சரியான முறையில் சமிபாடடையாதமையே இதற்கான காரணம் ஆகும்.

இதனை எமது உடலே ஒரு சில அறிகுறிகள் மூலம் எமக்கு உணர்த்தும். அவை என்ன என்கின்றீர்களா?


01. மலச்சிக்கல்
நாம் உண்ணும் இறைச்சி வகைகள் சரிவர சமிபாடடையாத போது மலச்சிக்கல் ஏற்படும். பொதுவாக இறைச்சி வகைகளில் அதிகளவு இரும்புச் சத்து காணப்படும். சில வேளைகளில் அதிகளவு இரும்புச் சத்து காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படலாம்.

02. அடிக்கடி பசி ஏற்படுதல்
உணவு உட்கொண்டு முடித்த மறு கணம் பசி ஏற்படுகின்றது என்றால் உங்களது உடலில் அதிகளவு புரோட்டீன் உள்ளது என பொருள்படும். உடலில் காபோஹைதரேற் அளவு குறைவாகக் காணப்படுமாயின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவடையும். இதனால் அடிக்கடி பசி ஏற்படும்.

03. கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றல்
நாம் உட்கொண்ட இறைச்சி சரிவர சமிபாடடையாத பட்சத்தில் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கையில் எமது உடல் தனது முழுக் கவனத்தையும் செலுத்தும். இதன் போது கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றும்.

04. உயர் இரத்த அழுத்தம்
ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுமாயின் அவர் இறைச்சி வகைகளை உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். இறைச்சியில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள், சரக்குகள் மற்றும் உப்பு போன்றவையே இதற்கான காரணமாகும்.

05. வியர்வை நாற்றம் மற்றும் வாய் நாற்றம்
இறைச்சி வகைகளை சமிபாடடையச் செய்வதில் ஏற்படும் சிக்கல்களால் அனேகமான வேளைகளில் வாயில் துர்நாற்றம் வீசுதல் மற்றும் வியர்வை நாற்றம் ஏற்படுதல் என்பன ஏற்படும்.

06. நோயெதிர்ப்புச் சக்தி குறைவடைதல்
அடிக்கடி நோய் வாய்ப்படுதல் ஒருவரது உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவடைந்துள்ளமையை எடுத்துக் காட்டும். இந்நிலையில், நாம் இறைச்சி வகைகளை உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.


07. களைப்பு
உணவு உட்கொண்ட பின்னர் களைப்பாக அல்லது சோர்வாக உள்ளதா? ஆம் எனில், நாம் உட்கொண்ட இறைச்சி வகை சரியான முறையில் சமிபாடடையவில்லை என்பதே பொருள். குறித்த இறைச்சி வகை குடலில் தங்கியுள்ளது என்பதே இதன் கருத்தாகும்.

08. குமட்டல்
உணவு உட்கொண்ட சிறிது நேரத்தின் பின்னர் குமட்டல் ஏற்படுமாயின் நாம் உட்கொண்ட இறைச்சியில் பக்டீரியா இருந்துள்ளது என்பதே இதன் பொருளாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் வைத்தியரை அணுகுவதே சிறந்தது.

09. வயிறு ஊதிக் காணப்படுதல்
இறைச்சி வகைகளில் காணப்படும் கொழுப்பு காரணமாக வயிறு ஊதிக் காணப்படும் நிலைமை ஏற்படும். குறித்த கொழுப்பு வகைகளை சமிபாடடையச் செய்யும் முயற்சி காரணமாகவே இந்த நிலைமை ஏற்படுகின்றது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!