தமிழர் பண்பாட்டில் வியக்க வைத்த முப்பாட்டனின் அறிவு… இதை எப்படி பயன்படுத்த வேண்டும்..?


விஞ்ஞானிகளை மிஞ்சிய நமது முப்பாட்டனின் அறிவு

நமது முன்னோர்கள் விட்டு சென்ற ஒவ்வொரு பழக்க வழக்கத்திலும் காரணம் இருக்கின்றது.

முடி வெட்டுவதில் இருந்து, மன்னர்கள் முடிசூடுவது வரை கடைபிடிக்கப்படும்

சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன. அவை வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது, உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

நம் முன்னோர்கள் தினமும் கடைபிடித்து வந்த வெற்றிலை போடும் பழக்கத்தில் பல நன்மைகள் உள்ளன. அது பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க…


பொதுவாக, வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது. அதே நேரம் இதயத்தையும் அது வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது…? உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. இது முற்றிலும் உண்மை.

இந்த மூன்று சத்துக்களும் சரியான விகிதத்தில் நமது உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட, நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு கிடைக்கும்.


இதற்கு வெற்றிலை போடும் பழக்கம் உறுதுணையாக இருக்கிறது. பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும்.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

அதனால் தான் நமது வீட்டு விசேஷங்களில், விருந்துகளிலும் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கப்படுகின்றது.

வெற்றிலை போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால்…, வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு, புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது.

நமது முன்னோர்களின் புகையிலையை வெற்றிலையில் பயன்படுத்தியது கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய பிரச்சனைகளில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும். சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.


ஆனால், பல வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. இதற்கு காரணம் அவர்களிடமிருந்த வெற்றிலை போடும் பழக்கமே.

ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

வெற்றிலை போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர்.

காலையில் உணவிற்கு பிறகு போடும் வெற்றிலையில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.


இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது.

நம் முன்னோர்கள் விட்டு சென்ற நல்ல பழக்கத்தை கை விட்ட நாம், கார்ப்பரேட் கம்பெனிகள் தயாரித்து விற்பனை செய்யும் ஹான்ஸ், குட்கா போன்றவற்றை பயன்படுத்தி கேன்சரை விலை கொடுத்து வாங்குகிறோம்.

இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்…….

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!