அதிகமான உடல் கொழுப்பு ,தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? உடனே இதை செஞ்சு பாருங்க!


இதயத்தின் ஆரோகியத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமஅனது.

ஏனெனில் கொழுப்புக்கள் அதிகம் அடைவதனால் இறப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை போன்றவையே இதயம் சார்ந்த ஆரோக்கியத்தை அதிகளவில் பாதிக்கிறது.

உணவு முறையில் சிறு மாற்றங்கள் ஏற்படுவதனால் இலகுவாக உயர் இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தலாம்.

தினமும் செலரி, திராட்சைப் பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதனால் பல நன்மைகளை பெறமுடிகிறது.
செலரியும் திராட்சையும் சேர்த்துக் கொள்வதனால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்?

• இரத்தத்தில் அமிலத் தன்மையை குறைக்கும்.

• இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும்.

• உடலில் குளுக்கோஸ், ஸ்டார்ச் அளவைக் குறத்து உடல் எடையை குறைவாக வைத்திருக்க உதவும்.

• காய்ச்சலைக் குணப்படுத்தும்.

• சிறந்த தூக்கத்தை தரும்.

• கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும்.

செலரி, திராட்சை பயன்படுத்தி செய்யப்படும் சுவையான உணவு.

தேவையனவை

• சிறிய இஞ்சித் துண்டு.

• திராட்சைப்பழம்

• ¼ எலுமிச்சப்பழம்

• செலரி.

செய்முறை:

சேர்மானங்கள் எல்லாவற்றையும் பிளண்டரில் போட்டு அரைத்து சுவையான பானத்தை தயார் செய்து கொள்ளவும்.


முக்கிய குறிப்பு:

நீங்கள் மருந்துகள் பயன்படுத்துபவர்களாக இருந்தால் திராட்சைப் பழ பானத்தை அருந்துவதை தவிர்த்தல் சிறந்தது.

இவை மருந்துகளின் மெட்டபோலிச செயஏபாட்டில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது. அத்துடன் இந்தப் பானத்தை சாப்பிடுவதற்கு 2 மணி நேரம் முன்பாக அல்லது 2 மணி நேரம் பின்னர் குடிப்பதே சிறந்தது.

திராட்சைப்பழத்தால் மெட்டபோலிச செயற்பாடு பாதிப்படையும் மருந்து வகைகள்.

• நோய் எதிர்ப்பு சக்திகளை குறைக்கும் மருந்து வகைகள்.

• வலிகளிற்கு பயன்படுத்தும் மருந்துகள்.

• ஆண்மைக் குறைபாட்டிற்காக பயன்படுத்தும் மருந்துகள்.

• மனோ வியாதிகளிற்கு பயன்படுத்தும் மருந்துகள்.

• ஒவ்வாமைக்கு பயன்படுத்தும் மருந்துகள்.

• இரத்த அழுத்தத்திற்காக பயனபடுத்தும் மருந்துகள்.

• கொழுப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள்.

பானம் உடலில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

செலரி.

இதில் காணப்படும் 3-n-butyl-phthalide இதனுடைய சுவைக்கும், வாசனைக்கும் காரணமாகிறது.

இது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், சிறுநீர் வெளியேற்றல், இரத்தத்தில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுதல் போன்றவற்றிற்கு உதவுகிறது.

மேலும் இரத்த நர்ம்புகளை விரிவடையச் செய்வதுடன், வயிற்றில் அமிலத் தன்மை அதிகமாக பார்த்துக் கொள்வதுடன், புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.
அத்துடன் வீக்கம், உடல் எடௌ அதிகரிப்பு, நீரிழிவு நோய், தூக்கமின்மை போன்ற நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.

திராட்சைப்பழம்.

திராட்சைப்பழத்தில் உள்ள naringenin நீரிழிவு நோயைக் குணப்படுத்தவும், கொழுப்பைக் கட்டுப்படுத்தவும், மெட்டபோலிக் பிரச்சைனைகளை தீர்க்கவும் உதவுகிறது.

இது சிறுநீரகம், கொழுப்பின் மெட்டபோலிசம், இன்சுலின் செயற்பாடுகளிற்கு உதவுகிறது.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!