இருமல் மற்றும் மூக்குச் சளியால் பாதிக்கப்பட்டால் மிகவும் கடினமானதும் மோசமான நிலமையும் உருவாகின்றது.
சிறுவர்களே இவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுடன் வைரஸ் தொற்றுக்களிற்கு எதிராக போராடும் தன்மை குறைவாக இருப்பதுவே.
மருத்துவர்கள் இருமலினால் பாதிக்கப்பட்டால் பாணி மருந்துகளை பரிந்துரை செய்கின்றனர்.
ஆனால் இவற்றினால் இதயத்துடிப்பு அதிகமாதல், தலை வலி, தலைச் சுற்று போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றது.
பொதுவாக இருமலுக்கு பயன்படுத்தும் பாணி மருந்து Codeine, மற்றும் dextromethorphan.
ஆனால் இவற்றை தவிர்த்து இயற்கை முறையில் இஞ்சி, தேனை பயன்படுத்துவதனால் உடலிற்கு பாதுகாப்பாகவும் கடினமான சளியையும் இலகுவாக நீக்க வல்லது.
இவற்றினால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை.
இஞ்சி தேன் பயன்படுத்தும் இயற்கையான தீர்வு.
தேவையானவை:
• ஒரு தேக்கரண்டி வெட்டப்பட்ட இஞ்சி அல்லது இஞ்சி பவுடர்.
• மாவு.
• ஒலிவ் எண்ணெய்.
செய்முறை:
தேனுடன் மாவை சேர்த்து நன்றாக கலக்கி எடுத்து கொள்ளவும், அதில் ஒலிவ் எண்ணெய், இஞ்சி துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும்.
இந்த கலவையை ஒரு துணியில் எடுத்துக் கொள்ளவும் அதனை துணியால் சுற்றி நெஞ்சுப்பகுதியில் அல்லது முதுகுப் பகுதியில் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
சிறியவர்களுக்கு மூன்று மணி நேரத்தில் அந்த துணியை நீக்குவது சிறந்தது, பெரியவர்களாக இருந்தால் இரவு முழுவதும் இதனை ஒட்டி வைத்து மறு நாள் காலையில் அகற்ற வேண்டும்.
இந்த முறையில் ஒலிவ் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யும், இஞ்சியை சாறாகவும் பயன்படுத்தலாம். – © Tamilvoice.com | All Rights Reserved
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!