தினமும் இதை உணவில் சேர்த்தால் ஆண்மைச்சுரப்பி, மார்பகம், கல்லீரல் பகுதியில் புற்றுநோய் தாக்காது..!


பீற்றூட் மிகவும் ஆரோக்கியமான உணவு. இதனை எமது தினசரி உணவில் சேர்த்து கொள்வது சிறப்பானது.

பீற்றூட்டில் உள்ள தாவர ஊட்டச்சத்தான betalains சக்தி வாய்ந்த ஆண்டிஒக்ஸிடண்டாகவும் வீக்கத்தைக் குறைப்பதற்கும், நச்சுத் தன்மையை நீக்குவதற்கும் பயன்படுகின்றது. இது பிறக்கும் போது ஏற்படும் குறைபாடு, புற்றுநோய், இதய நோய் போன்றவை வராமல் தடுக்கும்.

பீற்றூட் கண்டிப்பாக சாப்பிட வேண்டியதுக்கான காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

1. வீக்கத்தைக் குறைக்கும்.

உடலில் வீக்கம் ஏற்படுவதனால் பல நோய்களும் அதனால் தொடர்ச்சியான கோளாறுகள் ஏற்படும். இதில் உள்ள Betaine சூழலினால் ஏற்படும் அழுத்தத்தில் இருந்து புரோட்டின் கலங்களையும், நொதிகளையும் பாதுகாக்கின்றது.

மேலும் உடலில் உள்ள உறுப்புக்களையும் பாதுகாக்கின்றது.

2. ஈரலில் இருந்து நச்சுத்தன்மையை வெளியேற்றும்.

இதில் உள்ள ஆண்டிஒக்ஸிடன் உடலில் இருந்து நச்சுத் தன்மையை வெளியேற்றும். Betaline கலங்களிற்கு உறுதுணையாக இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது.

அத்துடன் Pectin ஈரலில் இருந்து முற்றாக நச்சை வெளியேற்றுகின்றது. Betalains நச்சை வெளியேற்றும் சக்தி அதிகம் உள்ளது.


3. இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

பீற்றூட் சாற்றை அருந்தி இரண்டு மணி நேரங்களில் இரத்த அழுத்தம் குறைவடையும். ஒரு கோப்பை பீட்டுட் சாறு 4 முதல் 5 புள்ளிகள் வரை இரத்த அழுத்தத்தை குறைத்து விடும்.

இரத்த குழாய்களை ஆறுதல் படுத்தி இரத்த திரவ நிலையை சீராக்குவதனால் இரத்த அழுத்தம் குறைவடைந்து இரத்த ஓட்டம் சீராகும்.

4. மலச்சிக்கலை தடுக்கும்.

இதில் உள்ள அதிகப்படியான நார்ப் பொருட்கள் குடல் இயக்கத்தை அதிகரிக்கச் செய்து கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றது.

Betacyanin எனும் தாவர ஊட்டச்சத்து பீற்றூட்டில் உள்ளதால் குடல் புற்று நோய் வராமல் தடுக்கின்றது.

5. பிறப்பு குறைபாடுகளைக் குறைக்கும்.
இதில் உள்ள விட்டமின் சி, நார்ப் பொருட்கள், பொட்டாசியம், மங்கனீசு தசை, நரம்பு, கல்லீரல், ஈரல், சிறுநீரகம் மற்றும் எலும்புகளை சிறப்பாக செயற்படுவதற்கு உதவுகிறது.

இதில் அதிகம் காணப்படும் பொலேற், விட்டமின் பி பிறப்புக் குறைபாடுகள் வராமல் தடுக்கும்.

6. புற்றுநோயைத் தடுக்கும்.

பீற்றூட்டில் உள்ள அதிகப்படியான தாவர ஊட்டச்சத்துகளே அதன் நிறத்திற்கு காரணம்.

பீற்றூட் சாறு உடலில் ஆண்மைச்சுரப்பி, மார்பகம், கல்லீரல் போன்ற பல உறுப்புக்களில் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கும்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!