பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவில், பங்கேற்ற போட்டியாளரும், நடன இயக்குனருமான ஆதித்யா குப்தா, 17 வயது கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிறுமி, ஆதித்யா குப்தாவிற்கு ஃபேஸ் புக் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகியுள்ளார். பின் இவரை தனியாக வெளியே வர வைத்த ஆதித்யா, இவரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து காரில் இருந்து கீழே இறக்கி விட்டு விட்டு அந்த இடத்தில் இருந்து மாயமாகியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, இந்த சிறுமி, ஒரு உணவகம் அருகே மயக்க நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் கொடுத்தன் பெயரில் இவரை மீட்ட போலீசார், அந்தப் பெண்ணை மருத்துவ மனையில் அனுமதித்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர், அப்போது இந்த சிறுமிக்கு மயக்க பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதைதொடர்ந்து இந்த சிறுமியின் பெற்றோர், ஆந்தேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரில் அடிப்படையிலும், சிறுமி கொடுத்த தகவலின் பெயரிலும், இந்த குற்ற சம்பவத்தை செய்தது நடன கலைஞர் ஆதித்தியா குப்தா என தெரியவந்தது.
மேலும் சிறுமி, மயங்கி கிடந்த இடத்தின் அருகே உள்ள சிசிடிவி ஒளிப்பதிவையும் சோதனை செய்த போது, குற்றவாளி ஆதித்தியா குப்தா தான் என உறுதி படுத்திய போலீசார் தற்போது இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.Source: tamil.asianetnews
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!