பிறந்து 2 நாளேயான பிஞ்சு குழந்தையை சர்ச்சில் விட்டு சென்ற தம்பதி – கேரளாவில் அதிர்ச்சி..!


கேரளாவில் எடப்பள்ளி பகுதியில் செயின்ட் ஜார்ஜ் போரேன் என்ற கிறிஸ்தவ ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு தம்பதி ஒன்று பிறந்து 2 நாளேயான குழந்தை ஒன்றை சுமந்து கொண்டு வந்துள்ளது. அவர்களுடன் மற்றொரு குழந்தையும் வந்துள்ளது.

2 நாளேயான குழந்தை ஆரஞ்சு நிற ரப்பர் சீட்டில் சுற்றப்பட்டு இருந்துள்ளது. குழந்தையின் தந்தை அதன் முன்னந்தலையில் முத்தம் தந்தபின் மெதுவாக சர்ச்சின் தரையில் கவனமுடன் வைத்து விட்டு சென்றுள்ளார்.

இதுபற்றிய சி.சி.டி.வி. காட்சிகள் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக வலை தளங்களில் வெளியாகி சர்ச்சையாகின. இந்நிலையில், நேற்றிரவு 8.30 மணியளவில் குழந்தையை கண்ட சர்ச்சின் பாதுகாப்பு ஊழியர் காவல் துறையிடம் உடனடியாக தகவல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திரிசூரில் வடக்கன்சேரி பகுதியில் அந்த பெற்றோர் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து குழந்தையின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது ஐ.பி.சி.யின் பல்வேறு பிரிவுகள் கீழ் மற்றும் சிறுவர் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!