நடிகர் சல்மான் கானை அடித்து உதைப்போருக்கு ரூ 2 லட்சம் பரிசு – ரசிகர்கள் அதிர்ச்சி..!


பாலிவுட் நடிகர் சல்மான் கான் இந்தி திரை உலகில் மிகவும் உச்சத்தில் உள்ளார். இந்தநிலையில் சல்மான் கான் தயாரிப்பில் உருவாகி உள்ள லவ்ராத்ரி திரைப்படம், அக்டோபரில், நவராத்திரி பண்டிகை நாளில் திரைக்கு வருகிறது.

இது குறித்து ஹிந்து ஹி ஆகேவின், ஆக்ரா நகர தலைவர், கோவிந்த் பராஷர் செய்தியார்களிடம் கூறியதாவது:

இந்துக்களால் கொண்டாடப்படும், நவராத்திரி பண்டிகையை இழிவு செய்யும் வகையில், லவ்ராத்ரி என அவரது தயாரிப்பில் உருவான படத்திற்கு சல்மான் கான் பெயரிட்டுள்ளார்.

லவ்ராத்ரி படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். இந்த படம் திரையிடப்பட்டால் போராட்டங்கள் நடத்துவோம். லவ்ராத்ரி படத்தை திரையிடும், தியேட்டர்களை தீயிட்டு கொளுத்துவோம். இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட சல்மான் கானை அடித்து உதைப்பருக்கு ரூ.2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

அவர் இவ்வாறு கூறியிருப்பது சல்மான் கான் ரசிகர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!