நடத்தையில் சந்தேகம்… காதல் மனைவியை கொடூரமாக குத்திக் கொன்ற கணவன்..!


சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே சாதி மறுத்து காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை கணவனே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிக்கு அடிமையாகி தாழ்வு மனப்பான்மை மற்றும் மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் மனிதாபிமானமே இல்லாமல் இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலத்தை அடுத்த நல்லூர், புதுநகரை சேர்ந்த காசி-லட்சுமி தம்பதியரின் மகள் பானுபிரியா . கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், அதே ஊரை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரை காதலித்து வந்த பானுப்பிரியா பெற்றோர் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

ஒரு சில மாதங்கள் மட்டுமே மகள் மீது கோபமாக இருந்த பானுப்பிரியாவின் பெற்றோர், மகளின் எதிர்காலம் கருதி அவர்களது திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். தாங்கள் குடியிருந்த வீட்டு மாடியில் இருவரையும் குடிவைத்தனர்.

இனிக்க, இனிக்க சென்றுகொண்டிருந்த சதீஷ் – பானுப்பிரியாவின் காதல் திருமண வாழ்க்கை கணவரின் போதைப்பழக்கத்தால் தடம் மாறியது. வேலைக்குச் செல்லாமல் சதா வீட்டிலேயே எந்நேரமுத் குடித்துக் கொண்டருந்தார் சதீஷ்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பானுபிரியா நீண்ட நேரமாக கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் லட்சுமி, மாடிக்கு சென்று பார்த்த போது, அங்கு பானுபிரியா கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.


அறுக்கப்பட்ட அவரது கழுத்தில் பெல்ட்டாலும் இறுக்கப்பட்டிருந்தது. தனது மகளின் சடலத்தை கண்டு தாய் லட்சுமி கதறித்துடித்தார். சம்பவம் தொடர்பாக சோமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் பானுப்பிரியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சதீஷ் வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றி வந்ததும, சதீஷ் தான் இந்த கொலையை செய்ததும் தெரியவந்தது.

சதீஷ் வேலைக்கு செல்லாத்ததால் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு பானுப்பிரியாவின் தலையில் விழுந்துள்ளது. அவர் அதே பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.

மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான சதீஷ், தனது அன்றாட செலவுக்கு மனைவியின் கையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவர் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கே சென்று பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் சதீஷுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. தனது மனைவி உடன் பண்புரபவர்களிடம் சகஜமாக பேசுவதை கண்டு பானுபிரியாவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பானுப்பிரியாவை அடித்து உதைப்பதை வாடிக்கையாக்கியதாக கூறப்படுகின்றது

இந்நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பானுப்பிரியாவிடம் ஏற்பட்ட தகராறில் வாக்கு வாதம் முற்றி காதல் மனைவி என்றும் பாராமல் பானு பிரியாவை பெல்ட்டால் சரமாரியாக தாக்கிய அவர் , கழுத்தை பெல்ட்டால் இறுக்கி கொலை செய்துள்ளார். மேலும் அவர் பிழைத்து கொள்ளக்கூடாது என்பதற்காக கத்தியாலும் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!