அதிகமாக நான்-ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்துபவரா? நெருங்கிக் கொண்டிருக்கிறது மரணம்..!!


இயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு நோய்களை உடலில் ஏற்படுத்துகின்றது.

நான்-ஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது பற்றி இங்கிலாந்து உள்ள பல்கலை கழகத்தில் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.


அந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

நான்ஸ்டிக் குக்வேர் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்கின்ற வேதிப்பொருள் உடலுக்கு கெடுதலை விளைவிக்கிறது.

அந்த பி.எப்.சி. வேதிப்பொருளினால்தான் எண்ணெய் மற்றும் கொழுப்பு போன்றவை நான்-ஸ்டிக் தயாரிப்புகளில் ஒட்டுவதில்லை.

நான்-ஸ்டிக் பொருட்களை அதிகமாக உபயோகிக்கும்போது, தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.


மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் ‘மெனோபாஸ்’ குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது.

பெண்களின் உடலில் பி.எப்.சி.யின் அளவு அதிகமாவதால் ‘ஈஸ்ட்ரோஜன்’ என்ற ஹார்மோனின் அளவு குறைந்து விடுகிறது.

இதுவே, மெனோபாஸ் பாதிப்பின் முக்கிய காரணமாக விளங்குகிறது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!