நான்கு நாட்களில் 4 கிலோ உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புத பானம்..!


உடல் எடை பிரச்சனை நிறைய பேருக்கு உள்ளது. அந்த உடல் எடையைக் குறைக்க ஏராளமான வழிகள் இருந்தாலும், ஒருசில வழிகளே நல்ல தீர்வைக் கொடுக்கும். மேலும் எடையைக் குறைக்க நினைப்போர் பலரும் எளிதில் உடல் எடையைக் குறைக்கும் வழியைத் தான் நாடுவார்கள்.

அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏனெனில் இந்த கட்டுரையில் 4 நாட்களில் 4 கிலோ உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த பானத்தை 4 நாட்களுக்கு மேல் குடிக்கக் கூடாது. சரி, இப்போது உடல் எடையைக் குறைக்க உதவும் அந்த பானத்தை எப்படி செய்வதென்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

தண்ணீர் – 8 டம்ளர்
வெள்ளரிக்காய் – 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சிப் பொடி – 1 டீஸ்பூன்
புதினா இலைகள் – 12
உலர்ந்த புதினா இலைகள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை – 1 (துண்டுகளாக்கப்பட்டது)

தயாரிக்கும் முறை:
ஒரு கண்ணாடி பாட்டிலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை வடிகட்டினால், பானம் குடிக்க தயார்!

குடிக்கும் முறை:
தயாரித்து வைத்துள்ள பானத்தை நாள் முழுவதும் 4-5 டம்ளர் குடிக்க வேண்டும். முக்கியமாக காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளரைக் குடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி
இந்த பானத்தைக் குடிக்கும் 4 நாட்களும், மிதமான அளவில் உடற்பயிற்சியை செய்து வர வேண்டியது அவசியம். இதனால் இடுப்பு, வயிறு மற்றும் உடலின் மற்ற பாகங்களில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் வேகமாக கரையும்.

குறிப்பு
இந்த பானத்தை தொடர்ந்து 4 நாட்கள் குடித்த பின், 1 வாரம் இடைவெளி விட்டு தான் மீண்டும் குடிக்க வேண்டும்.-Source: tamil.boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!