நீர்கட்டு என்றால் என்ன..? வீட்டிலேயே நீர்க்கட்டுக்கு தீர்வு தரும் இயற்கை உணவுகள்…!


உடலுக்குள் தேங்கும் அதிகப்படியான நீரினால் ஏற்படும் பாதிப்பை நீர்கட்டு(EDEMA) எனக் கூறுவார்கள். இதனால் கை, கால், பாதம், முழங்காலில் வீக்கம் ஏற்படும்.

இதயம் மற்றும் சிறுநீரகம் பாதிப்படைவதனால் நீர்த்தேக்கம் ஏற்படுகின்றது.இரத்த அழுத்தம் கூடுவதனால் அல்லது குறைவடைவதனாலும், அதிகமாக உட்கார்ந்தோ அல்லது நின்றுகொண்டிருத்தல்,

அதிகமான சோடியம் உட்கொள்ளுதல், ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மை, கர்ப்பகாலத்தில், மருந்துகள், இரத்தத்தில் ஏற்படும் தொற்றுக்களால் நீர்த்தேக்கம் ஏற்படுகின்றது.

நீர்க்கட்டை குணமடைய செய்யும் உணவுகள்

(1) டாண்டேலியன்

உடலில் சோடியம் அதிகரித்து பொட்டாசியம் குறைவதாலும் நீர்த்தேக்கம் ஏற்படுகின்றது.சோடியம் நீரை திசுக்களில் நீரை தேங்க வைக்கின்றது.

ஆனால் பொட்டசியம் அதிக படியான நீரை வெளியேற்ற உதவும்.டாண்டேலியனில் அதிகம் பொட்டாசியம் காணப்படுவதால் இது அதிக சிறுநீரை வெளியேற்ற உதவுகின்றது.

தினமும் டாண்டேலியன் தேநீரை எடுத்து வந்தால் நீர் கட்டு குணமடையும்.


(2) அதிமதுரம்

அதிமதுரத்தில் சிறுநீர் போக்கைத் தூண்டும் தன்மை அதிகமாக காணப்படுவதால், தொடர்ச்சியாக சிறுநீரை வெளியேற்றி நீர்க்கட்டிலிருந்து தீர்வைத் தருகின்றது.

(3) அஸ்பேரகஸ் (தண்ணீர் விட்டான் கொடி)

மாதவிடாய் சுழற்சி மற்றும் மூட்டு நோயினால் ஏற்படும் நீர்த்தேக்கத்தின் போது அஸ்பேரகஸ் எடுத்து கொள்வதனால், அதில் உள்ள சல்பர் உடைந்து சிறுநீர் போக்கை அதிகரிக்கச் செய்கின்றது.

(4) கேரவர் விதைகள்

கேரவர் விதைகள் சமிபாட்டு கோளாறு மற்றும் நீர்க்கட்டுக்கு சிறந்த தீர்வைத் தருகின்றது. இதனை உணவுடன் அல்லது தேநீருடன் சேர்த்துக்கொள்வதனால் தொடர்ச்சியாக சிறுநீரை வெளியேற்ற உதவுகின்றது.

(5) குதிரை வாலி

குதிரைவாலி தேநீர் வடிவில் நமக்கு கிடைக்கின்றது. இது அதிகமாக சிறுநீரை வெளியேற்ற உதவுகின்றது, ஆனால் இதில் உள்ள பக்க விளைவினால், நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயாளர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.


(6) கறுப்பு மற்றும் பச்சை தேநீர்.

கறுப்பு மற்றும் பச்சை தேநீரில் சிறுநீரை வெளியேற்றும் தன்மை உள்ளது, ஆனால் தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் நமது உடம்புக்கு பழக்கமடைந்து விடும், அதனால் தேவைப்படும் போது மட்டும் போது எடுத்துக் கொள்ள வேண்டும்.

(7) வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் அதிக நீர்த் தன்மை உள்ளது. இதில் உள்ள சல்பர் மற்றும் சிலிக்கன் சிறுநீரகத்தின் தொழிற்பாட்டை அதிகரித்து யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகின்றது. பொட்டாசியம் அதிகளவில் உள்ளதால் நீரினை வெளியேற்ற உதவுவதுடன், வீக்கம் உள்ள பகுதியில் வைப்பதனால், வீக்கத்தை குறைக்க முடியும்.


(8) மூங்கில் தண்டு

மூங்கில் தண்டில் உள்ள பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருப்பதால், சோடியத்தை குறைவடையச் செய்து, சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கின்றது.

(9) செலரி

செலரியில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், நீர்த்தன்மையால், சோடியம், பொட்டாசியம் அளவு சமநிலை அடைகின்றது. இதனால் சிறுநீர் போக்கு அதிகமாகின்றது.


(10) வாழைப்பழம்.

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், சோடியம் அளவை குறைத்து சிறுநீர் போக்கை அதிகரிகின்றது.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!