வெறும் வயிற்றில் தினமும் இப்படி செய்தால் மாரடைப்பு என்பதே வராது..!


மாரடைப்பு என்பது அவ்வளவு சாதாரண விடயம் அல்ல. ஒன்று மேற்பட்ட முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்களும் உண்டு. அதே சமயம் முதல் முறை ஏற்பட்ட மாரடைப்பிலேயே உயிரிழந்தவர்களும் உண்டு.

ஆகவே மாரடைப்பு ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் மாரடைப்பு வராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் நாம் அறிந்திருத்தல் அவசியம்.


நோய் வந்த பின் அதற்கு வைத்தியம் பார்ப்பதை விட, வரும் முன் காப்பதே மிகச் சிறந்தது. எனவே மாரடைப்பே வராத வண்ணம் நாம் எம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது எனப் பார்ப்போம்.

மாரடைப்பை தடுக்கக் கூடிய மிகச் சிறந்த பானமே இஞ்சிப்பால். இந்த இஞ்சிப்பாலை அருந்துவதால் நுரையீரல் சுத்தமாகும், சளி குணமடையும், வாய்வுத் தொல்லை என்பதே வராது. இத்துடன் இரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தால்அது நீக்கி விடும். அதனால்மாரடைப்பு தடுக்கப்படுகின்றது.

தேவையான பொருட்கள்:
இஞ்சி – சிறியதுண்டு
பால் – 1 கோப்பை
தேன் – 1 தேக்கரண்டி


செய்முறை:
இஞ்சியின் தோலை நீக்கி விட்டு அதனை நசுக்கிக் கொள்ளவும். நசுக்கிய இஞ்சியை முக்கால் கோப்பை தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க விட வேண்டும். தண்ணீரில் இஞ்சியின் சாறுமுழுவதும் இறங்கியவுடன் அதனை வடிகட்டி சாற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கோப்பை காய்ச்சிய பாலில் வடிக்கட்டிய இஞ்சிச்சாற்றை கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது பனங்கற் கண்டு சேர்த்தால் சுவையான இஞ்சிப்பால் தயார்.

இந்த இஞ்சிப்பாலை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மாரடைப்பு என்பதே வராது. – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!