8 வாரங்கள் தொடர்ச்சியாக இதை மென்று சாப்பிட்டால் உடற்பருமன் குறையும் என தெரியுமா..?


உடல்பருமனடைதல் என்பது இன்றைய உலகில் அனைவராலும் எதிர்கொள்ளப்படும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. உடற்பருமனை குறைக்க வேண்டும் எனும் நோக்கில் பலர் தங்களது உணவை விடுத்து உடற்பயிற்சிகள் செய்ய முயற்சிப்பதுண்டு.

ஆனால் அவ்வாறு செய்வது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு வெற்றிலை மூலம் தீர்வு காணமுடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஆயுர்வேதத்தின்படி, வெற்றிலை மற்றும் மிளகை உண்பதால் நம் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து, உடல் எடை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம், இந்த வெற்றிலை வைத்தியத்தை நாம் எவ்வாறு செய்வதென்பதைப் பார்ப்போம்!


வெற்றிலை ஒன்றை எடுத்து அதனுடன் 5 மிளகு உருண்டைகளை சேர்த்து மடித்து வாயில் போட்டுமென்று சாப்பிட வேண்டும்.

இவ்வாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வெற்றிலை சாப்பிடுவதால் உடலுக்குள் நிகழ்வது என்ன?

01. வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால் இரைப்பை குடல்வலி, அசிடிட்டி, சமிபாட்டு பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் போன்றவை குணமாகின்றன. அத்துடன் உடலில்உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் முழுவதும் சுத்தமாகின்றது.


02. வெற்றிலையை மெல்லுவதால் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, வயிற்றில் உள்ள சளியம்அதிகரிக்கும். இதனால் அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கப்படும். இதனால் காஸ்ட்ரிக் அமிலத்தின் தீயதாக்கங்களில் இருந்து வயிற்றின் உட்பூச்சு பாதுகாக்கப்படும்.

03. வெற்றிலையை மெல்ல ஆரம்பித்த உடனேயே வாயில் எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நாம் உட்கொள்ளும் உணவை சமிபாடடையச் செய்யுமாறு வாயானது வயிற்றுக்கு செய்தி அனுப்பும். இதனால் செரிமானம் சிறப்பாக செயற்பட ஆரம்பிக்கும். வயிற்றில் இருந்து நச்சுக்களை நீக்கவும் இது உதவுகிறது.

குறிப்பு: மஞ்சள் நிறத்தில் அல்லது அழுகிய நிலையில் உள்ள வெற்றிலையை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது வயிற்றுப் போக்கு பிரச்சனையை ஏற்படுத்தி விடும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!