தினமும் நாம் ஏன் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா..?


உடற்பயிற்சி என்பது சிறுவர்கள் முதல் பெரியோர்கள் என அனைவருக்கும் மிக மிக அவசியமானதொன்று. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றார்கள் எம் முன்னோர்கள். ஏனெனில், நோயால் அவதியுறும் ஒருவரின் ஏனைய செல்வங்கள் பறந்து விடும் எனக் கூறுவார்கள்.

இந்த உடற்பயிற்சியை மேற்கொள்வதால் பல்வேறு நன்மைகள் கிட்டுகின்றன. அவை என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?

01. உடற்பயிற்சி தசைகளின் வலுவை அதிகரிக்க துணை புரியும். இதனால் வயதாகும் போது தசைகளின் இயக்கத்தை நிலை நிறுத்த உதவும்.

02. உடற்பயிற்சி உடம்பில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை கூட்டி, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும். மேலும் இதயத்தில் இரத்தம் உறைதல் தடுக்கப்படும்.


03. தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் தசைகளின் வலிமை கூடும். தினசரி உடற்பயிற்சி செய்வது எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும்.

04. மனநிலையை ஊக்குவிக்கும் உணவு முறையை நம்புவதற்கு பதிலாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. ஏனெனில் உடற்பயிற்சி மூளையில் உற்பத்தியாகும் இரசாயனங்களுக்கு அதிகப்படியான தூண்டுதலை கொடுப்பதால் மனநிலை சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கும்.

05. தினசரி உடற்பயிற்சி செய்வது எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும். இதனால் ஒஸ்ரியோ புரோசிஸ் மற்றும் ஆர்தரைட்டிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

06. உடற்பயிற்சி குடல் புற்று நோய், மார்பக புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் போன்ற பல வகையான புற்று நோய்கள் வருவதை குறைக்க உதவி புரிகிறது. அதனால் உடற்பயிற்சி செய்து புற்று நோய் வரும் அபாயத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!