நீரிழிவு நோய்க்கு வீட்டிலேயே மருந்து எப்படி தயாரிப்பது என தெரியுமா..?


நாகரீக மோகத்தால் உணவுப் பழக்கவழக்கம் அடியோடி மாறி இப்போதெல்லாம் எவரைப் பார்த்தாலும் அவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றார்கள். எமது உடலில் உள்ள பங்கிரியஸ் எனப்படும் கணையத்தால் உடலுக்குத் தேவையான அளவு இன்சுலின் தயாரிக்க இயலாமை அல்லது கணையத்தால் இன்சுலின் தயாரிக்கப்பட்டும் அது உடம்பில் சரிவர பயன்படுத்தப்படாமை போன்ற காரணங்களாலேயே இந்த நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. மேற்குறிப்பிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு வகை 1 மற்றும் வகை 2 என நீரிழிவு நோய் வகைபடுத்தப்பட்டுள்ளது.

எமது உடலில் உள்ள செல்களுக்கு சக்தியை வழங்கும் மிக முக்கியமான ஹோர்மோனே இந்த இன்சுலின்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அதிகளவான தாகம், தொற்று, அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் மங்கலான பார்வை என்பன ஏற்படும். இந்த நீரிழிவு நோய்க்கு வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்.


இப்போது நாம் எவ்வாறு அந்த மருந்தை தயாரிப்பது எனப் பார்ப்போம்.
01. செலரி 02 துண்டு
02. 01 பச்சை ஆப்பிள்
03. பசளிக்கீரை 03 பிடி
04. கரட் 02


செய்முறை
ஆப்பிள் மற்றும் கரட் என்பவற்றை நன்கு கழுவி ஆப்பிள் விதைகளை அகற்றிக் கொள்ளவும். பின்னர், மேற்குறிப்பிட்ட அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

எவ்வாறு பயன்படுத்துவது
மிக்சியில் அரைத்து எடுத்த கலவையை ஒவ்வொரு நாளும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்வதன் மூலம், நீரிழிவு நோய் படிப்படியாக இல்லாமல் போவதை அவதானிக்க முடியும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!