தமிழ்நாட்டில் மட்டும் தான் சிஸ்டம் சரியில்லை! ரஜினி அதிரடி பதில்..!


புதிய அரசியல் கட்சி தொடங்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். இதையடுத்து தனக்கு ஆதரவை அதிகரிப்பதற்காக ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கி உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.

கடந்த ஆண்டு ரஜினி ரசிகர்களிடம் பேசுகையில் தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று கூறினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று ரஜினி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கேள்வி:- சிஸ்டம் சரியில்லை என்று கூறி இருந்தீர்களே.. இந்தியாவில் சிஸ்டம் சரியில்லையா? தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லையா?


பதில்:-தமிழ்நாட்டில் தான் சிஸ்டம் சரியில்லை. நான் சொல்வது தமிழ்நாட்டுக்கு மட்டும்தான். முதலில் இதை சரி செய்ய வேண்டும். அரசியலில் கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவது பற்றி காலம்தான் முடிவு செய்யும்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!