சிறுநீர் கழிக்கும் போது அடிக்கடி இரத்தம் கசிகிறதா? அலட்சியம் வேண்டாம்!


சிறுநீரின் நிறத்தை வைத்தே ஒருவருக்கு என்னென்ன நோய்கள் உண்டு என்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு இன்று மருத்துவத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு சிறுநீருடன் இரத்தக்கசிவு ஏற்படுமாயின் அவர் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும். ஏனெனினல் அது புரொஸ்டேட் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாக கண்டறியப்பட்டுள்ளது.

சிலருக்கு இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாகவும் சிறுநீர் காணப்படலாம். சிறுநீரில் இரத்தம் கசிந்தால் அது நிச்சயமாக புரொஸ்டேட் புற்றுநோயாகத் தான் இருக்கும் எனக் கூறமுடியாது. எனினும், அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் வைத்தியரை நாடுவதே சிறந்தது.

இருப்பினும், உண்மையாகவே புரொஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிறுநீர் கழிக்க அதிக நேரம் செல்வதோடு குறைந்தளவான சிறுநீரே வெளியேறும். அத்துடன் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதோடு முழுமையாக சிறுநீர் வெளியேறவில்லை போன்ற உணர்வும் ஏற்படும்.


புரொஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவருக்கு ஆணுறுப்பில் விறைப்பு ஏற்படுவதும் கடினமாகத் தோன்றும். இதே வேளை, புரொஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கு உண்மையான காரணம் என்ன என்பது கண்டறியப்படாவிடிலும் வயது முதிரும் போதே ஒருவர் இந்த புற்றுநோய்க்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புற்றுநோய் மிக மெதுவாகவே பரவும் தன்மை கொண்டது. இதனால் ஒருவர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பினும் பல தசாப்தங்களுக்கு அறிகுறி தென்படாமலிருக்க வாய்ப்புள்ளதோடு மருந்து உட்கொள்ளாமலும் இருக்க முடியும்.

இந்த புற்றுநோயை கண்டறியும் பட்சத்தில், அறுவை சிகிச்சை மூலமாக அதனை அகற்ற முடியும். இல்லாவிடில் ரேடியோ தெரப்பி அல்லது ஹோர்மோன் தெரப்பி மூலமாகவோ குணப்படுத்தலாம். இதே வேளை, எத்தகைய உணவுகள் மூலம் இந்த புற்றுநோயிலிருந்து தப்பிக்க முடியும் என்பதை நாம் இப்போது பார்ப்போம்.


புரோக்கோலி:
புரொஸ்டேட் புற்றுநோயால் பாதிக்க உள்ள வாய்ப்பினை குறைக்கும் வல்லமை இந்த புரொக்கோலிக்கு உண்டு. புரொக்கோலியில் காபோஹைதரேட் குறைவாக உள்ளதோடு அன்டிஒக்ஸிடன்ட்ஸ் மற்றும் பைதோகெமிக்கல்கள் என்பன உள்ளதால் அவை செல்களில் மாற்றம் ஏற்படுவதை தவிர்க்கின்றன.


மாதுளம்பழச் சாறு:
மாதுளம்பழச் சாறை தினமும் அருந்துவதால் புற்றுநோயால் பாதிப்படைவது தடுக்கப்படுகின்றது.

சோயா விதை:
சோயாவில் உள்ள சத்துக்கள் மனித செல்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணிகளுடன் தாக்கம் புரிந்து புற்றுநோயில் இருந்து பாதுகாக்கின்றன. இதனால் தினமும் நாம் உட்கொள்ளும் உணவுடன் சோயாவை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


கரட் :
புற்றுநோயை எதிர்க்கக்கூடிய சக்தி கரட்டிற்கு உண்டு. அதிலுள்ள பீட்டா – கரோட்டீன் புற்றுநோயை உருவாக்கும் புறக்காரணிகளை எதிர்த்து போராடக்கூடியது. இந்த பீட்டா கரோட்டீன் விட்டமின் ஏயாக மாறக்கூடியது.– © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!