பகல் கனவு காண்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா..?


கனவுகள் மனிதனோடு பின்னிப் பிணைந்தவை. மனத்தில் அமுக்கப்பட்ட ஆசைகள் கனவுகளாகப் பரிணமிக்கும் என்றும், ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் எண்ணங்களின் வாசனைகளே கனவுகளுக்குக் காரணம் என்றும் பல்வேறு கருத்துக்கள் உண்டு. நிறைவேறாத ஆசைகளே கனவுகளாக வெளிப்படும் என்பது உலகத்தின் தலைசிறந்த மனோதத்துவ நிபுணர் சிக்மண்ட் ஃப்ராய்டின் கோட்பாடு.

பொதுவாகவே நமது ஊரில் பகல் கனவு காண்பவர்களை வேலை வெட்டி இல்லாதவன் என்று கூப்பிடுவார்கள். ஆனால், பகல் கனவு காண்பவர்கள் சிறந்த அறிவுத்திறனுடன் கூடிய படைப்பாளிகளாக இருப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.? அதுபற்றிப் பார்க்கலாம்

ஆசிரியர்கள், பெற்றோர்கள், வேலையிடத்தில் பணி புரியும் மேல் அதிகாரிகள் என அனைவரும் பகல் கனவு காண்பவர்களை கவனக் குறைவு உள்ளவர்கள் என்று கூறுவார்கள். ஆனால், மற்றவர்களுடன் ஒப்பிடும் போது பகல் கனவு காண்பவர்களுக்கு அறிவுத்திறனும், படைப்பு திறனும் அதிகமாக இருக்கிறதாம்.

பகல் கனவு காண்பவர்கள் எப்போதும் ஏதோ ஒரு நேர் கோட்டில், ஒரே சிந்தனையில் தான் இருப்பார்கள். இது அவர்களது படைப்பு திறனை அதிகரிக்கிறது.


இவர்களுக்கு மன சோர்வோ, மன அழுத்தமோ அதிகமாக ஏற்படுவது இல்லை. மேலும் மற்றவர்களுடன் ஓப்பிடுகையில் பகல் கனவு காண்பவர்களின் ஆரோக்கியமானது நல்ல நிலையில் இருக்கிறது.

மற்றவர்களது உணர்வுகளையும், மன நிலையையும் கணிக்க கூடிய திறன் இவர்களுக்கு இருக்கிறதாம். இதன் மூலம் யாரிடம் எப்போது என்ன வேலை கொடுக்க வேண்டும் என்பதில் சரியாக தேர்வு செய்து வேலை வாங்குவார்களாம்.

கற்பனை திறன் மிகவும் அதிகமாய் இருக்கும் இவர்கள், பகல் கனவு காண்பதன் மூலம், இவர்களது அறிவுத்திறன் மேம்படுகிறதாம்.

பகல் கனவு காண்பவர்கள் யாரிடமும் உதவி ஏதும் வேண்டி நிற்காமல் அவர்களது திறனை உணர்ந்து அவர்களால் என்ன செய்ய முடியும், அதை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளலாம், வெற்றியை அடைவது எப்படி என அனைத்தையும் சுயமாக கண்டுணரும் தன்மைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பகல் கனவு கற்பனை படைப்புத் திறனை அதிகரிக்க உதவுகிறது. இவர்களது சிந்தனையும், யோசனைகளும் மேலோங்கி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பகல் கனவு காணும் போது யாரும் எதிர்வினையாக நினைப்பது இல்லை, இதனால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது. பகல் கனவினால், நீண்ட மகிழ்ச்சி அடையும் இவர்களது மன நிலை எப்பொழுதும் மேலோங்கியே இருக்கிறது.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!