பொடுகு தொல்லையா..? வாரம் ஒருமுறை இதை செய்தால் மட்டும் போதும்.!

உங்கள் தலையில் உள்ள பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வுகாண வாரத்தில் ஒரு முறை இதனை செய்து வந்தால் போதும்.

ஆயுர்வேதத்தில் தலைக்கு வரும் பொடுகு நோயை தாருணம் என்று அழைக்கிறார்கள். தோல் வறண்டு போவதால் அலர்ஜி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும். தலை, முகம் மற்றும் காது போன்ற பகுதிகளில் இது காணப்படும். குழந்தைகளுக்கு வந்தால் இதை cradle cap என்று சொல்வார்கள். ஒரு சிலருக்கு வெயில் காலத்தில் இது அதிகமாக இருக்கும். கவனமாக இருந்து மன அழுத்தத்தைக் குறைப்பதால் இது மாறிவிடும்.

இதற்கு ஏலாதி தைலம், வெட்பாலை தைலம், ஊமத்தை இலை தைலம் ஆகியவற்றில் தெளிப்பது சிறந்தது. கொய்யா இலை பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் சிறந்த மருந்து. வாரத்தில் மூன்று முறை 4 கொய்யா இலையை எடுத்து தயிருடன் கலந்து, விழுதாக அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருக்கவும். அதன் பிறகு ஷாம்பு தேய்த்து தலைமுடியை அலசி வர நல்ல பலன் கிடைக்கும். மேலும் முடி உதிர்வு நின்று முடி செழித்து வளரும்.

பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண மருதாணி இலையை அரைத்து,அதில் சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து எட்டு மணி நேரம் உலர வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த பேஸ்ட்டை தலையில் தடவி இரண்டு மணி நேரத்திற்கு பிறகு குளித்தால் பொடுகுத் தொல்லை இருக்காது. இதனை வாரத்தில் ஒருமுறை தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தய பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!