‘வாரம் ஒருமுறை ப்ரோக்கோலி சூப்’… குழந்தைகளுக்கு இப்படி செஞ்சு கொடுங்க.!

ப்ரோக்கோலி யுடன் வால்நட்டை சேர்த்து சாப்பிட்டால் மறதி நோயை சரிசெய்ய முடியும் இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

தேவையானவை:

சின்ன சைஸ் புரோகோலி, பொடியாக நறுக்கிய வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு – தலா 1.

சோள மாவு – 2 டீஸ்பூன்.

பால் – 1 கப்.

தண்ணீர் – 2-3 கப்.

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு.

செய்முறை :

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு வதக்கி பின்பு,புரோகோலியை சுத்தமாக்கிய பின் சிறிதாக நறுக்கி, வெங்காயத்துடன் சேர்த்து வதக்க வேண்டும். மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிட வேண்டும்.

மிக்ஸியில் புரோகோலி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நீர் விட்டு அரைக்க வேண்டும். ஒரு கப்பில் பாலுடன் சோள மாவைக் கலந்து, கரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். சூடாக இருக்கும் கடாயில், அரைத்த புரோகோலி விழுது மற்றும் பாலில் கரைத்த சோள மாவைக் கலந்துவைக்க வேண்டும். தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து, ஒரு கொதி வந்தபிறகு இறக்க வேண்டும். இந்தச் சூப்பின் மேல் வால்நட் தூவி சாப்பிடலாம்.

பலன்கள்:

புற்றுநோய்க்கு எதிரான ஊட்டச்சத்து அதிக அளவு உள்ளது. இதனால் மார்பகம், வயிறு தொடர்பான அனைத்து புற்றுநோய்களையும் உருவாக்கக்கூடிய செல்களை தடுக்கின்றது. வைட்டமின் சியும் இரும்பு சத்தும் அதிகம் உள்ளதால் மூளை மற்றும் இதயத்தை பலப்படுத்தும். மறதி நோய் வராமல் தடுக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் நினைவுத்திறன் அதிகரிக்கும். பிரக்கோலி யை இப்படி சூப்பாக செய்து தந்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!