பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் பூக்கள்..!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் பூக்களின் மருத்துவ குணங்கள் அறியலாம் வாருங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவை உண்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடலிலுள்ள முக்கியமான நோய்களைப் போக்க பூக்கள் மட்டுமே போதும். அவ்வாறு மருத்துவ குணங்கள் நிறைந்த பூக்களை நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

ஆவாரம் பூவை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். வேப்பம் பூவை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் உள்ள நோய் தொற்றுகள், கிருமிகளை அழித்துவிடும். சளி இருமலைப் போக்கும். செம்பருத்திப் பூவை கொதிக்க வைத்து குடித்தால் உடல் சூடு தணியும். தினமும் ஒரு செம்பருத்தி பூவை அப்படியே சாப்பிட்டு வந்தால் ரத்தக் குறைபாடு பிரச்சினை உட்பட பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும்.

அவ்வாறு பல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக அமையும் வாடாமல்லி பூவின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். வாடாமல்லி இன் விலை மற்றும் பூக்கள் சேற்றுப்புண், கொப்புளங்களை குணமாக்கும் தன்மை உடையவை. வாடா மல்லி பூக்கள் மற்றும் இலைகளை நீரில் காய்ச்சி, வடிகட்டி ஆற வைத்து கண்களை கழுவினால், கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மற்றும் அரிப்பு சரியாகும். வாடா மல்லி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒன்றன் மீது ஒன்று அடுக்கி வைத்து மார்பகத்தின் மேல் கட்டி வந்தால், தாய்மார்களுக்கு வீக்கம் மற்றும் வலி குறையும்.- source: seithisolai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!