மூட்டு எலும்புகள் பலமடைய முட்டைகோசை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..?


முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.

இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றை தடுக்கும். முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது.

எனவே இதனை சாப்பிட்டால் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும் முட்டைகோஸ் சாப்பிட்டால் புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

1. அல்சரால் அவதிப்படுபவர்கள் முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால் அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும் குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.

2. இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டை கோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால் அது கண்புரையை தடுக்கிறது.

3. எடையை குறைக்க நினைப்போர் தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.


4. பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

5. தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும்.

6. முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

7. எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச் சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

8. கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

9. மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்று வலியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

10. வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும். தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!