தொள தொளவென தொங்கும் தொப்பையா..? இத ஃபாலோ பண்ணுங்க.. முழுசா கரைச்சிடலாம்!


நாம் நாள்தோறும் எவ்வளவு உழைப்பை செலுத்துகிறோமோ, அதற்கேற்ப உணவை உண்டாலே போதும். உடல் எடை கட்டுப்பாட்டுடன், அளவான ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.

நம்மில் பல பேருக்கு உடல் எடை அதிகரிக்கக் காரணம், உட்கார்ந்த இடத்திலேயே இருப்பது தான். அவ்வாறு இருந்து கொண்டு, அதிக கலோரிகள் கொண்ட உணவை வழக்கமாக உண்கிறோம். வாங்க உடல் எடையைக் கச்சிதமாக வைத்துக் கொள்ளலாம்.


* நாள்முழுதும் சரியான அளவு தண்ணீர் அருந்தவும். சிட்ரஸ் வகை பழச்சாறுகளை அருந்தினால், அதிக உணவை உட்கொள்வதை தவிர்த்துவிடும்.

* ஊட்டச்சத்துக்கள் தந்தும், உடல் எடை அதிகரிக்காமலும் இருக்க ஷேக் டிரிங்க்ஸ் அருந்தவும்.


* அலுவலகங்கள், வீடுகளில் உள்ள படிக்கட்டுகளில் நடந்து செல்வதை வழக்கமாக கொள்ளவும். நடைபழக்கம் நாள்தோறும் கட்டாயம் இருக்க வேண்டும்.

* வார இறுதி நாட்களில் உடற்பயிற்சியில் கட்டாயம் ஈடுபட வேண்டும். எப்போதும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். பசி எடுப்பதற்காக காத்திருந்தால், அதிக கலோரிகளை உட்கொள்ள நேரிடலாம்.


* நாள்தோறும் 7 மணிக்கே உணவை உட்கொள்ளும் முறையை கடைபிடிக்கவும். உணவு அருந்திய பின், சுமார் 2 மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். இதனால் கலோரிகள் கரையும்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!