கல்யாணம் ஆகாதவரா..? எப்ப வேணாலும் உங்க உயிர் போய்விடுமாம்! – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!


கல்யாணமானவர்களைக் காட்டிலும் கல்யாணம் ஆகாதவர்கள் மாரடைப்பு போன்ற இதய நோய்களால் விரைவில் மரணமடைவார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் அட்லாண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அர்ஷத் குயுமியு என்ற ஆராய்ச்சியாளர் நடத்திய ஆய்வில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களில் கல்யாணமானவர்களைக் காட்டிலும் கல்யாணம் ஆகாதவர்கள், விவாகரத்தானவர்கள், தனியாக வாழ்பவர்கள் விரைவாக மரணமடைவார்கள் என்று கண்டறிந்துள்ளார்.

மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் அன்பு, அரவணைப்பு போன்றவை கல்யாணம் ஆகாதவர்களுக்கு கிடைக்காமல் போவதே இதற்கு காரணம் என்று அவரது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.-Source:tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!