தினமும் குளிக்கும் போது நமது உடலை எவ்வளவு தூய்மைபடுத்தினாலும் அந்த அளவிற்கு தொப்புள் பகுதியை சுத்தம் செய்யும் பழக்கம் அனைவரிடமும் குறைவு தான்.
ஆனால் தொப்புள் பகுதியில் அழுக்குகள் சேர்வதால் பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
தொப்புளில் அழுக்கு சேர்வதால் ஏற்படும் விளைவுகள்?
. தொப்புளை சுத்தமாக வைக்கவில்லை எனில், ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும். அதுவும் கர்ப்ப காலத்தில் ஈஸ்ட் தொற்றுகள் இருந்தால் குழந்தையையும் பாதிக்கும்.
. தொப்புளில் தொற்று ஏற்பட்டிருந்தால் அரிப்புகள், கெட்ட துர்நாற்றம், வலி போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.
. குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப்புகள், வியர்வை மற்றும் இறந்த செல்கள் இது போன்ற பல காரணமாக 65 வகையிலான பாக்டீரியாக்கள் தொப்புள்களில் வாழ்கிறது.
. பாக்டீரியாக்களின் தொற்றுக்களினால் தொப்புள் பகுதியில் புண் மற்றும் சீழ் கட்டி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தொப்புள் பகுதியை சுத்தம் செய்வது எப்படி?
. பட்ஸை சிறிதளவு பேபி ஆயில் அல்லது தண்ணீரில் நனைத்து தொப்புளை சுத்தம் செய்த பின்பும் மற்றொரு காட்டனை பயன்படுத்தி தொப்புளை சுத்தமாக துடைக்க வேண்டும்.
. மிதமான சூடுள்ள நீரில் சிறதளவு உப்பை சேர்த்து அந்த நீரில் பஞ்சை நனைத்து, தொப்புளை நன்றாக சுத்தம் செய்வதுடன், அந்த ஈரத்தன்மை போக்க மீண்டும் பஞ்சினால் துடைக்க வேண்டும்.
. தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடு செய்து அதை தொப்புளில் தடவி, கடிகார முள் திசையிலும், கடிகார முள்ளுக்கு எதிர்திசையிலும் மசாஜ் செய்ய வேண்டும்.-Source: news.lankasri
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!