சனிக்கிமைகளில் கட்டாயம் ஏன் முளைக்கீரை சாப்பிடணும் என தெரியுமா..?


முளைக்கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் முன்னணியில் இருக்கிறது. கண்பார்வையை கூர்மையாக்கக்கூடியது. இந்த கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்து நிறைந்துள்ளது.

முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது.

இதுதவிர, நார்ச்சத்தும், மாவுச்சத்தும் குறிப்பிடும் அளவுகளில் உள்ளது. அதனால், உடல் வலுவடையும், வளரும் சிறுவர்களுக்கு இந்த கீரையை தொடர்ந்து கொடுத்தால் உடல் நல்ல வளர்ச்சி அடையும்.

இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்து, ரத்தத்தை சுத்தம் செய்துவதோடு, இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கீரை அதிமதுரம் (ஒரு துண்டு), மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்

முளைக்கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்து, சேர்த்து, மிளகாய் வற்றலை கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்.

முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உள்மூலம், பவுத்திர கட்டி, ரத்த மூலம் போன்றவை சரியாகும்.

முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து, கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கி, நல்ல பசி உண்டாக்கும்.


முளைக்கீரையுடன் சிறிது புளிச்ச கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்து சாப்பிட்டால் ருசியின்மை குறைபாடு நீங்கும்.

முளைக் கீரை தோட்டங்களில் வளர்க்கப்படும் கீரையாகும். இக்கீரையை இளங்கீரை என்றே சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

முளைக்கீரை பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் காணப்படும்.
முற்றிய முளைக்கீரையே தண்டுக்கீரையாகும்.

முளைக்கீரையை நன்கு சுத்தமாக அலசி சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம் 1 ஸ்பூன், மிளகு 5, சின்ன வெங்காயம் 4, பூண்டுபல் 3, இலவங்கப்பட்டை இவற்றைச் சேர்த்து நீர்விட்டு வேகவைத்து நன்கு கடைந்து சாப்பிடலாம். பொரியலாகவும் சாப்பிடலாம். சூப் செய்தும் அருந்தலாம்.

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்ற உணவாகும்.

முளைக்கீரையை வாரம் ஒருமுறையாவது சமைத்து உண்பது நல்லது.
இளைத்த உடல் தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் இது சிறந்த மருந்தாகும்.

மலச்சிக்கலைப் போக்கும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும். மூலநோய்க்காரர்களுக்கு இது சிறந்த உணவாகும். மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

நாவிற்கு சுவையைக் கொடுக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
உடல் சூட்டைத் தணிக்கும்.


கண் எரிச்சலைப் போக்கும். கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்.
நரம்புத் தளர்வைப் போக்கி நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.
இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.

இதில் அதிகளவு கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதனால் எலும்புகளுக்கு வலு கொடுப்பதுடன் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.

உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

மார்புச்சளி, தொண்டைச் சளியைப் போக்கும்.

ஏன் குறிப்பாக, சனிக்கிழமைகளில் கீரை சாப்பிட சொல்கிறார்கள். தனிக்காரணம் உண்டா என குழம்ப வேண்டாம். பொதுவாக பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளுக்கும் விடுமுறை என்பதால், வீட்டில் பொறுமையாக சமைப்பார்கள்.

மற்ற வேலைநாட்களில் கீரையை ஆய வேண்டுமென்றே ஒதுக்கிவிடுவார்கள். அதனால் சனிக்கிழமைகளில் நிதானமாக கீரையை ஆய்ந்து மண்ணில்லாமல் பருப்பு சேர்த்து சமைத்து சுடசுட நெய் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!