விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை சாலையில் உள்ள செந்திவிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். பருப்பு மில் தொழிலாளி.
இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன்கள் ஹரிகரன் (வயது 14), ஆதிசேஷன் (10) இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.
விருதுநகரில் தற்போது பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக கலைச்செல்வியின் தம்பி சோலைமுருகன் (40) மதுரையில் இருந்து வந்திருந்தார்.
அவர் இன்று காலை மருமகன்கள் 2 பேரையும் அழைத்துக்கொண்டு விருதுநகர் குல்லூர்சந்தை அணைக்கு சென்றார். அங்கு சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அதனை பார்த்ததும் சோலைமுருகன் உள்பட 3 பேரும் குளிக்க ஆசைப்பட்டனர்.
அதன்படி சோலை முருகன், ஹரிகரன், ஆதிசேஷன் அகியோர் தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான இடத்திற்கு சென்றதால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.
அவர்களை அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் சோலை முருகன் உள்பட 3 பேரும் நீரில் மூச்சு திணறி இறந்தனர். அவர்களது உடலையே மீட்க முடிந்தது. பலியான சோலைமுருகன், மதுரையில் பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். சூழக்கரை போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!