இதை நாக்கின் மேல் பகுதியில் தேய்த்தால்..1 நிமிஷத்துல உடல் கோளாறை கண்டுபிடிக்கலாமாம்!!


வருடத்தில் ஒரு முறையாவது பொது மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அதே போல முப்பது வயதை கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாக இருக்கிறது. பொதுவாகவே மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள பலரும் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு காரணம், அதற்கு ஆகும் செலவு தான். உங்கள் வீட்டிலேயே ஒரு ஸ்பூன், பிளாஸ்டிக் கவர் மற்றும் விளக்கு கொண்டு உங்கள் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது அறிய முடியும் என்றால் செய்வீர்களா?


செய்முறை 1
நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண எவர்சில்வர் ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள். அதை அடிப்பகுதியை கொண்டு நாக்கின் மேல் பகுதியில் தேய்க்க வேண்டும்.

செய்முறை 2
பிறகு அதை 100 % டிரான்ஸ்பரன்ட் பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்க வேண்டும். பிறகு கவரில் போட்ட ஸ்பூனை, அந்த கவருடன் ஒரு மேசை விளக்கின் ஒளிப்படும் படி வைக்க வேண்டும்.

செய்முறை 3
ஒரு நிமிடம் மேசை விளக்கின் ஒளிப்படும் படி வைத்த பிறகு அந்த ஸ்பூனை கவரில் இருந்து எடுத்து பாருங்கள். ஸ்பூனின் அடிப்பகுதியில் எந்தவிதமான நிற மாற்றம் அல்லது வாசனை வரவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கிறது என அர்த்தம்.


1. உங்கள் நாக்கில் இருந்த பாக்டீரியாவினால் நாற்றம் ஏதேனும் அந்த ஸ்பூனில் இருந்து வெளிப்பட்டால் நுரையீரல் அல்லது வயிற்றில் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

2. இனிப்பின் மணம் வந்தால் நீரிழிவு அல்லது அமோனியம் வாடை வந்தால் சிறுநீரக கோளாறுகள் என அறியலாம்.

3. வாடை மட்டுமின்றி, ஸ்பூனின் அடிபகுதியில் ஏதேனும் கறை வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருந்தால் தையிராயிடு சுரப்பியில் தாக்கம் ஏற்பட்டுள்ளதை அறியலாம்.

4. இரத்தம் ஓட்டம் குறைவாக மற்றும் உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால் ஸ்பூனின் அடிப்பகுதியில் நீலநிறமாகியிருக்கும்.

5. வெள்ளை நிறத்தில் இருந்தால் சுவாச குழாயில் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

6.ஸ்பூனின் அடிப்பாகம் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் உடலில் சிறுநீரக பிரச்சனை என்பதை வெளிக்காட்டுகிறது என் அறியலாம்.-Source: tamil.boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!