தனுசு ராசிக்காரங்களால் மற்றவர்களுக்கு தான் நல்லது நடக்கும்!


நிகழும் விளம்பி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை, நள்ளிரவு 12 மணிக்கு குரு பகவானின் ஆதிக்கத்தில் ஆங்கிலப் புத்தாண்டு (2019) பிறக்கிறது. எண் கணித ஜோதிடப்படி 2019ன் கூட்டுத்தொகை (2+0+1+9=12,1+2=3). குரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த வகையில், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் எப்படி இருக்கப் போகிறது என்று இங்கு பார்ப்போம்.

பிறருக்கு உதவும் நல்ல மனதை கொண்ட தனுசு ராசிக்கார்களுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் சில தேவையற்ற அலைச்சல்களால் உடல் நலம் பாதிக்கப்படும். நிதானமாக சிந்தித்து செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். தொலை தூர பயணங்களால் அனுகூலமாக இருக்கும்.

தூக்கமின்மை, வாழ்க்கைத்துணைக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல் பாதைகள் ஏற்படக்கூடும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்களது விமர்சனத்தை மறந்துவிடுங்கள். இல்லையென்றால், அதன் மூலம், மன வருத்தம் ஏற்படும். நண்பர்கள் கூட உங்களை புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும்.


கணவன் – மனைவிக்கிடையே சகிப்புத்தன்மை அவசியம். இல்லையென்றால், பிரிவு ஏற்பட வாய்ப்புண்டு. வருமானம் அதிகரித்தாலும், அதைவிட செலவு அதிகரிக்கும். சிக்கனம் அவசியம் தேவை. இல்லையென்றால், பணக்கஷ்டம் ஏற்படக்கூடும்.

உத்தியோகிஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை ஏற்படும். உயரதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்களது வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மை அளிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். மாணவர்கள் தீய சிந்தனைகளை தவிர்த்து கவனம் செலுத்துவது அவசியமாகும். தூக்கமின்மை, மறதி ஏற்படும்.

மொத்தத்தில் இந்த வருடம் தனுசு ராசிக்காரர்களுக்கு எதையும் சகித்துக் கொள்ளும் தன்மை அளிப்பதோடு, அதன் மூலம் வெற்றி பெற வைப்பதாகவும் அமையும்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!