நீங்களும் சமையலில் இந்த மூலிகைகளை பயன்படுத்துகிறீர்களா..?


சமையலில் பல விதமான வாசனைத் திரவியங்களை பயன்படுத்தி அதன் சுவையையும் நறுமணத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது. வெவ்வேறு காலப்பகுதிகளில் வேறுபட்ட மூலிகை வாசனைத் திரவியங்கள் பயன்படுத்த முடியும். இவற்றை பயன்படுத்துவதனால் உடலை ஆரோக்கியமாக பேணுவது இலகுவானது.

துளசி, கொத்தமல்லி, புதினா போன்ற பல மூலிகைச் செடிகளை சமையலில் பயன்படுத்துவதனால் அவை பல நோய்களை இயற்கை முறையில் இலகுவாக குணப்படுத்துகின்றது.

சமையலில் பயன்படுத்தும் மூலிகை பொருட்கள் சில:

1. துளசி.
துளசி அணைவரும் நன்கறிந்த மூலிகைச் செடி. இதனை சூப், சாலட் போன்ற பல உணவுகளில் பயன்படுத்துகின்றனர். அத்துடன் இதை இறைச்சி, மீன் உணவுகளிலும் பயன்படுத்துகின்றனர்.

2. பார்ஸ்லி
பார்ஸலி எல்லா விதமான உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிகளவான அண்டிஒக்ஸிடன், விட்டமின் சி, ஏ காணப்படுவதனால் உடலின் ஆரோக்கியம் பேணப்படும்.

3. கொத்தமல்லி
கொத்தமல்லியின் சுவை காரணமாக அதனி பல உண்வுகளில் பயன்படுத்துகின்றனர். அதிகளவில் இலத்தீன், ஆசிய நாடுகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனை உணாவில் சேர்த்துக் கொள்வதனால் இரத்தத்தில் குலுக்கோஸ் அளவு குறைவடைவதுடன், சிறுநீரகத் தொகுதியின் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கின்றது.

4. புதினா.
புதினா மற்றொரு மூலிகைத் தாவரம் இது உணவுகளின் குளிர்மைத் தன்மைக்கு பயன்படுத்தப்படுகின்றது. இதனை பயன்படுத்துவதனால் சமிபாட்டை அதிகரிக்கச் செய்து வயிறு வம்பந்தப்பட்ட கோளாறுகளையும் நீக்கி விடும்.

5. றோஸ்மேரி.
றோஸ்மெரி உடன் மற்று உலர்ந்த உணவுப் பொருட்களில் பயன்படுத்துகின்றனர். இது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், மன அழுத்தத்தையும் குறைக்கும். அதுமட்டுமல்லாதுன் இரத்த ஒட்டத்தை அதிகரிக்கச் செய்வதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.


6. தைம்
தைமை காய் வகைகள், மீன், இறைச்சி போன்ற பல உணவுகலில் பயன்படுத்துகின்றனர். இதன் பூ, இலை, எண்ணெய் போன்றவற்றை வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, வாதம், தொண்டை வலி, இருமல் போன்ற பல நோய்களைக் குணப்படுத்துவதற்கு உதவுகின்றது. இதில் அதிகமான விட்டமின் சி, ஏ காணப்படுகின்றது.

7. ஆர்கோனா.
ஆர்கனோவை பாஸ்தா, பீட்க்ஷா போன்ற பல இத்தாலியன் உணவு வகைகளில் அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர். இதில் காணபப்டும் அண்டிஒக்ஸிடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றது.

8. வெந்தயம்
வெந்தயத்தைப் பயன்படுத்துவதனால் வேறுபட்ட சுவையை சூப், கடலுணவுகள், சாலட் போன்றவற்றில் பெற முடிகிறது. வெந்தயத்தை உணவில் பயன்படுத்துவதனால் மாதவிடாய் வலிகள் குறைதல், கொழுப்பின் அளவு குறைதல், மன அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.

9. இனப் பூண்டு.
வெங்காயத்தை போன்ற சுவஇ கொண்ட இந்த பூண்டை அதன் நிறத்திற்காகவும் சுவைக்காகவும் பல உணவு வகைகளில் சேர்த்துக் கொள்ளகின்றனர். இதில் அதிகளவான விட்டமின், கனியுப்புக்கள், அண்டிஒக்ஸிடன் காணப்படுவதுடன் குறைந்தளவு கலோரிகள் உள்ளன.

10. சாகி.
சாகியை போர்க், பீன்ஸ், உருளைக் கிழங்கு, சீஸ் போன்ற உணவுப் பொருட்களைல் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் அதிகளவான் நார்ப் பொருட்கள், விட்டமின் பி, கல்சியம், பொல்லேற், மக்னீசியம் போன்ற பல கனியுப்புக்களைக் கொண்டதனால் உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!